“எவன் கூட கள்ள தொடர்பு வெச்சுட்டு இருக்க”…. அரிவாள் வெட்டு… தப்பியோடிய தாய்…. வயது மகனுக்கு விஷம் கொடுத்து கொன்ற தந்தை…. உச்சக்கட்ட கொடூரம்..!

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், பெற்ற மகனுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற கூலித் தொழிலாளியின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் என்பவருக்கும், ரூபி என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் வசித்து வந்த பிரபாகரனுக்கு, கடந்த சில நாட்களாக தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், பிரபாகரன் தினந்தோறும் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் இவர்களுக்கிடையேயான வாக்குவாதம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 27-ம் தேதி இரவும் இருவருக்குள்ளும் கடுமையான சண்டை வெடித்தது. மனைவியின் நடத்தையைக் குறித்து பிரபாகரன் தவறாகப் பேசி வற்புறுத்திக் கேட்டதால், ரூபியும் எதிர்த்து வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் கடும் மனவேதனையும் ஆத்திரமும் அடைந்த பிரபாகரன், ஒட்டுமொத்த குடும்பத்தையும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி, வெளியில் சென்று விஷம் வாங்கி வந்த அவர், அதனை மூன்று கிளாஸ்களில் ஊற்றி மனைவி மற்றும் மகன்களை வலுக்கட்டாயமாகக் குடிக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரூபி விஷம் குடிக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த பிரபாகரன் அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் நிலைகுலைந்த ரூபி, உயிருக்கு பயந்து தனக்கு அருகில் இருந்த முதல் மகனை மட்டும் உடனடியாக அழைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். ஆனால், அதற்குள் அங்கு நடந்த விபரீதத்தை அறியாத பிரபாகரனின் 3 வயது சிறிய மகன் நாகராஜ், தந்தை கொடுத்த விஷத்தைக் குடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. விஷம் அருந்திய சில நிமிடங்களிலேயே சிறுவனின் உடல்நிலை மிக மோசமடைந்து, வாயில் நுரை தள்ளியதைக் கண்டு பிரபாகரன் பதற்றமடைந்தார்.

உடனடியாக குழந்தையை மீட்டு பழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பிரபாகரன் கொண்டு சென்றார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்குச் சிறுவன் அனுப்பி வைக்கப்பட்டான். ஆனால், அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே சிறுவன் நாகராஜ் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பழனி நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரபாகரனைக் கைது செய்தனர். மனைவியின் மீதான சந்தேகத்தால் பெற்ற மகனையே விஷம் வைத்துக் கொன்ற தந்தையின் இந்த கொடூர செயல் பழனி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா… ஆளுங்கட்சியை உலுக்கும் குதிரை பேர விவகாரம்…. வெளியான பகீர் தகவல்…!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்…

17 minutes ago

“அப்பாகிட்ட சொல்லாதே”… மகள் கொடுத்த ஒற்றை க்ளூ… வேலூரில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை… கதவைத் திறந்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார் (48). இவருடைய மனைவி தனலட்சுமி…

28 minutes ago

ஸ்டாலின் – இபிஎஸ் ரகசியக் கூட்டணி?… தவெக ஆட்சியை கவிழ்க்கப் பின்னப்பட்ட 35 கோடி… நேரடி மிரட்டல் விடுத்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்…!

தமிழக அரசியலில் "குதிரை பேர" விவகாரம் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக்…

28 minutes ago

பாக்யராஜ் மறைவு… சாந்தனுவை டார்கெட் செய்யும் நெட்டிசன்கள்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன?… பாக்யராஜ் எழுதிய ரகசிய கடிதம்…!

தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த இயக்குநராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும் முத்திரை பதித்த கே. பாக்யராஜ் அவர்கள், சமீபத்தில் தனது 73ஆவது…

42 minutes ago

இபிஎஸ்-க்கு விழுந்த பேரிடி… தவெக வேண்டாம்… அண்ணாமலையுடன் கைகோர்க்கும் எஸ்பி வேலுமணி… கொங்கு மண்டலத்தில் அதிரடி திருப்பம்…!

அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் வெளியேற்றமும் அதிகரித்துக் கொண்டே செல்வது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

56 minutes ago

அப்போ அப்படி… இப்போ இப்படி… தவெக பெண்களின் பழைய வீடியோவை போட்டு மானத்தை வாங்கிய ஜூலி! ஆதாரத்தோடு வெளியான அதிர்ச்சி வீடியோ…!

தமிழ்நாடு அரசியலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையேயான மோதல் தற்போது சட்டமன்றத்தைத் தாண்டி சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago