நீயெல்லாம் ஒரு மனுஷனா… 2 வயது பிஞ்சு குழந்தையை கொடூரமாக கொலை செய்த தந்தை… மனதை பதற வைக்கும் பின்னணி…!

Spread the love

மதுரை, விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி செல்வம் (25) , மனைவி வனிதா (24). கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமாகி 2 வயதில் பார்கவி என்ற பெண் குழந்தை இருந்தது. தனியார் நிறுவனம் ஒன்றில் பாண்டி செல்வம் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு மனைவி அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். குழந்தை பார்கவியும் தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு  பாண்டி செல்வம்  வேலைக்கு போகும் வழியில் குழந்தை பார்வதியை பார்க்கச் சென்றுள்ளார்.

பின்பு வேலை பார்க்கும் நிறுவனத்திற்கே குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது கணவன் மனைவி இருவரும் போனிலே சண்டை போட்டுக் கொண்டுள்ளனர்.  இதைக் கண்டு குழந்தை பார்கவி  கதறி அழுதுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டிச்செல்வன் குழந்தையை அடித்து மனிதாபிமானமே இல்லாமல் தண்ணி தொட்டிக்குள் வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது குழந்தை இறந்த நிலையில் கிடந்ததால் குழந்தையை எடுத்து சாக்கில் போட்டு கட்டி இயந்திரத்தின் அடியே வைத்துவிட்டு ஒன்னும் தெரியாதது போல் காவல் நிலையத்திற்கு சென்று குழந்தையை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

நிறுவனத்தில் இயந்திரத்தை இயக்க முயன்ற போது துர்நாற்றம் வீசி உள்ளது. அதனால் அங்கு இருந்து ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாக்கு  மூட்டையில்  குழந்தை உடல் இருப்பதை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். இதைக் குறித்து சந்தேகம் அடைந்த போலீசார் பாண்டிச்செல்வனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளார் பாண்டி. அவரது குடும்பத் தகராறில் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு உள்ளார். போலீசார் பாண்டி செல்வத்தை கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியிலும், அவருடன் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Divyamayakannan

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

1 மணத்தியாலம் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

1 மணத்தியாலம் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

3 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

3 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

3 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

4 மணத்தியாலங்கள் ago