சென்னை ஓட்டேரி அடுத்த மங்களபுரம் பகுதியை சேர்ந்த ரேபிகா (27) என்பவர் அயனாவரம் பகுதியை சேர்ந்த சதீஷ் (35) என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்தோடு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஆறு வயதில் மகள் இருந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கருத்து வேறுபாடு காரணமாக ரேபிகா தனது மகளுடன் கணவனை பிரிந்து அவருடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மகள் தனது தந்தை சதீஷை பார்க்க அவரது வீட்டுக்கு சென்று இருந்தார். அப்போது சதீஷ் தனது மகளை அழைத்துக் கொண்டு சென்னை மவுண்ட் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு தனது மகளை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு சதீஷ் தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடனே தகவல் அறிந்து வந்த போலீசார் சதீஷை காப்பாற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து ஜாமினியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்த சதீஸ் தன்னுடைய மனைவி மற்றும் அவருடைய தங்கை ஆகியோருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் செல்போனில் தினமும் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
இது தொடர்பாக அவர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து மீண்டும் சதீஷை கைது செய்துள்ளனர். இருந்தாலும் விடாமல் தொடர்ந்து சதீஷ் தன்னுடைய மனைவி மற்றும் அவருடைய தங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆறு வயது மகளை துடிதுடிக்க கொன்றும் கொலைவெறி அடங்காமல் அவர் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…