சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற ஆட்டோ ஓட்டுநர், தனது 16 வயது பிளஸ்-2 மகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் வீட்டு வேலைக்குச் செல்லும் நேரங்களைப் பயன்படுத்தி, குடிபோதையில் இருந்த தமிழ்ச்செல்வன் தனது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். தந்தையின் இச்செயலால் மனமுடைந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையைக் குறித்துத் தாயிடம் கதறி அழுதபடி கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து மாணவியின் தாயார் புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், புழல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பாரதி தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 18 வயதுக்குட்பட்ட சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றது உறுதியானதைத் தொடர்ந்து, தமிழ்ச்செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். பெற்ற தந்தையே மகளிடம் இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மல்லுபுரா காவல் எல்லைக்குட்பட்ட தனௌலி மயானம் அருகே உள்ள சாக்கடையில், வாலிபர் ஒருவரின் சடலம்…
பீகாரில் வீதியோரம் காரப்பொறி வியாபாரம் செய்து வந்த ஏழை வியாபாரி ஒருவரை, நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும்…
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பாரிமுனையில்…
காசா நகரத்தின் தல் அல்-ஹவா பகுதியில், இஸ்ரேலின் முந்தைய வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகச் சேதமடைந்திருந்த ஆறு மாடி குடியிருப்பு கட்டிடம்…
குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்க்கேஜ் பகுதியில், 17 வயது பிளஸ் 2 பள்ளி மாணவி ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக…
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்த உறவினர்கள் சிலர், 67 வயதான முன்னாள் ராணுவ…