VIDEOS
“தலைவா, ராஜாதி ராஜா வெளியில வா, வரலைன்னா செத்துருவோம்”.. ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற கண்ணீர் மல்க அழைத்த ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த். கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து தன்னுடைய ஸ்டைல் மற்றும் உழைப்பு ஆகியவற்றால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெரும் அளவிற்கு உயர்ந்தார். 70 ஆண்டுகளைக் கடந்தும் ஒருவரால் ஹீரோவாகவே தொடர முடியும் மற்றும் ரசிகர்களை தக்க வைக்க முடியும் என்பதற்கு ரஜினி ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார். இந்திய சினிமாவில் ரஜினி என்ற பெயருக்கு ஒரு கெத்து உண்டு. பவர் இருக்கு ஸ்டைல் இருக்கு.
இப்படி பெயருக்கான பல விஷயங்களை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வயதிலும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சினிமாவில் இளம் ஹீரோக்களுக்கு டப் கொடுத்து வருகிறார். அது மட்டுமல்லாமல் வசூல் நாயகனாகவும் டாப்பில் உள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு தனது நடிப்பை காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
ரசிகர்களின் வாழ்த்தும் கடவுளின் அருளும் என்னை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது என ரஜினி பல நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக கூறியுள்ளார். இப்படி பல புகழுக்குரிய ரஜினி இன்று தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற அவரது ரசிகர்கள் அனைவரும் அவரது வீட்டின் முன்பு திரண்டு உள்ளனர். ஆனால் ரசிகர்களை சந்திக்க ரஜினி இன்னும் வராததால் கண்ணீர் மல்க ரசிகர்கள் அவரை அழைத்தபடி உள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க