Connect with us

CINEMA

5 மாசமா சம்பளம் தரல… மேக்கப் ரூம்ல வச்சி பூட்டி… தனக்கு நடந்த சித்ரவதை குறித்து மனம் திறந்த பிரபல நடிகை..

பணி செய்யும் இடத்தில் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அத்துமீறி நடந்து கொண்ட ஆண்கள் குறித்தும் வெளிப்படையாக தற்பொழுது பெண்கள் கூறி வருகின்றனர். திரையுலகை பொறுத்த வரை இது மிகவும் சாதாரணமாக நடைபெறுகிறது. நடிகைகளிடம் இவ்வாறு நடந்து கொள்வது வழக்கமாகியும் விட்டது.

   

அரசியல், திரையுலகம், ஊடகம் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் மீது  புகார்களைப் பெண்கள் தைரியமாக தற்பொழுது தெரிவித்தபடி உள்ளனர். தமிழகத்தில் பிரபல திரைப்பட பாடலாசிரியரான கவிஞர் வைரமுத்து மீது பத்திரிகையாளர் சந்தியா மேனன் மற்றும் பாடகி சின்மயி ஆகியோர் ‘மீ டூ’  புகார் தெரிவித்தது பரபரப்பையும் பலத்த விவாதங்களையும் ஏற்படுத்தியது.

தற்பொழுது  பாலிவுட் சின்னத்திரையின் பிரபல நடிகை  கிருஷ்ண முகர்ஜி ஷூட்டிங் ஸ்பாட்டில்  தனக்கு நடந்த மோசமான அனுபவம் குறித்து கூறியுள்ளார்.  அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என இத்தனை நாட்கள் தைரியம் வந்தது இல்லை, ஆனால் இன்று அதை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். தங்கல் டிவியில் எனது கடைசி நிகழ்ச்சியான சுப் ஷகுன் நிகழ்ச்சி செய்யத் தொடங்கியபோது இந்த மனச்சோர்வு எனக்கு தொடங்கியது.

அது என் வாழ்வின் மிக மோசமான முடிவு. தயாரிப்பு நிறுவனமும், தயாரிப்பாளர் குந்தன் சிங்கும் என்னைப் பலமுறை துன்புறுத்தியுள்ளனர். ஆடைகளை மாற்றும் போது அவர்கள் ஒருமுறை என்னை என் மேக்கப் அறையில் அடைத்து வைத்தனர். 5 மாதங்களாக இன்றுவரை எனது சம்பளத்தை தரவில்லை, இதற்காக தயாரிப்பு நிறுவனத்தை பலமுறை அணுகியும் பதில் கிடைக்கவில்லை. நான் முழுவதும் பாதுகாப்பற்று உடைந்து பயந்துவிட்டேன், இதே போல் மீண்டும் நடந்தால் என்ன ஆகும், எனக்கு நீதி வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களும், நெட்டிசன்களும் அவருக்கு தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top