தமிழ் சினிமாவின் பழம்பெரும் நகைச்சுவை நடிகராக திகழ்ந்த கவுண்டமணி, ஒரு காலகட்டத்தில் மிகவும் பிசியான காமெடி நடிகராக வலம் வந்தவர். கவுண்டமணி-செந்தில் காம்போவை இப்போதும் ரசித்து பார்க்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர். கவுண்டர் வசனங்களுக்கு பெயர் போன கவுண்டமணியின் காமெடி காட்சிகள் காலத்தை தாண்டியும் ரசிக்கவைப்பவை.
எனினும் அவர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அவரை சுற்றி பல கிசுகிசுக்கள் எழுந்தன. அப்போது தமிழின் மிகப் பிரபலமான ஒரு வாரப் பத்திரிக்கையில் ஒரு குண்டு நடிகைக்கும் கவுண்டமணிக்கும் தொடர்பு என்பது போல் ஒரு கிசுகிசு வெளிவந்ததாம்.
அந்த சமயத்தில் “வடக்குப்பட்டி ராமசாமி” என்ற திரைப்படத்தில் கவுண்டமணி நடித்துக்கொண்டிருந்தாராம். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் அந்த வாரப் பத்திரிக்கையின் நிருபர் ஒருவர் செய்தி சேகரிக்க வந்தாராம்.
அப்போது கவுண்டமணி அந்த நிருபரின் தோளைப் பிடித்து தனியாக அழைத்துச் சென்று, “உங்களைத்தான் தேடிட்டு இருந்தேன் வாங்க” என்றாராம். அந்த நிருபர் மிகவும் பதட்டமாக, “இந்த வாரம் உங்கள் பத்திரிக்கைல குண்டு நடிகைக்கும் எனக்கும் ஒரு தொடர்புன்னு கிசுகிசு வெளிவந்திருக்கே” என்று கவுண்டமணி கேட்க, அதற்கு அந்த நிருபர், “அண்ணே, நான் எழுதலைண்ணே, வேற ஒரு நிருபர் எழுதியிருப்பாங்க” என்று படபடப்பாக கூறியிருக்கிறார்.
அப்போது கவுண்டமணி, “நீ எழுதலைன்னு எனக்குத் தெரியும். ஆனால் அந்த விஷயம் குடும்பத்துக்குள்ள கும்மாளம் அடிக்குது. ரொம்ப படாதபாடு படுத்துது. அந்த விஷயத்துக்கு மட்டும் கொஞ்சம் மறுப்பு எழுத சொல்லிடுங்க” என்று கேட்டுக்கொண்டாராம். கவுண்டமணி இவ்வாறு கேட்டவுடன் அந்த நிருபரும் “சரிண்ணா, நான் பாத்துக்குறேன்” என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டாராம்.
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ், விசிக, IUML ஆகிய கட்சிகள்…
தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், பொதுமக்கள் மத்தியில் அதை வாங்குவதற்கான ஆர்வம் அதிகரித்துள்ள வேளையில், "தற்போது தங்கம் வாங்க…
லோஹாகாட் கோட்டையில் ஜூன் 18 அன்று நடந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட…
ஒடிசா மாநில அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில், 'ஹம் தில் தே சுகே சனம்' என்ற புகழ்பெற்ற…
டெல்லியில் மருந்துக்கடைக்காரர் ஒருவரின் நேர்மையைப் பாராட்டி, போலந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது சமூக…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தும்பேரி கிராமத்தில், 16 வயது பள்ளி மாணவி மோவிதாவின் மர்ம மரணமும், அவரது…