“இந்தியாவில் இதெல்லாம் நடக்குமா?”… டெல்லி மருந்தகத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்… மிரண்டு போன வெளிநாட்டுப் பெண்… வைரலாகும் வீடியோ…!

Spread the love

டெல்லியில் மருந்துக்கடைக்காரர் ஒருவரின் நேர்மையைப் பாராட்டி, போலந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி, பலரது இதயங்களை வென்று வருகிறது. இந்தியாவில் நீண்ட நாட்களாக வசித்து வரும் டொமினிகா படாலாஸ்-கல்ரா என்ற அந்தப் பெண், நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு மருந்தகத்தில் சில மருந்துகளை வாங்கினார். ஆனால், அவசரத்திலோ அல்லது மறதியிலோ அந்த மருந்துப் பையை அங்கேயே விட்டுவிட்டு டெல்லியை விட்டும் வெளியே சென்றுவிட்டார். நான்கு நாட்கள் கழித்து மீண்டும் அந்த கடைக்குச் சென்றபோது, இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் தன் மருந்துகள் பத்திரமாக இருக்குமா என்ற சந்தேகம் அவருக்குள் எழுந்துள்ளது.

https://www.instagram.com/reel/DZ4-yRqAiyD/?utm_source=ig_embed&ig_rid=AzVke1m9L18EPenSpSIlbtx

மருந்தகத்தை அடைந்த டொமினிகா, கடைக்காரரிடம் தனது மருந்துப் பையைப் பற்றி விசாரித்தபோது, அந்த கடைக்காரர் உடனடியாக அந்தப் பையை நினைவு கூர்ந்து, அதனை அப்படியே பத்திரமாக எடுத்து அவரிடம் நீட்டியுள்ளார். இதனால் ஆச்சரியமும் நெகிழ்ச்சியும் அடைந்த டொமினிகா, தனது சமூக வலைதளப் பக்கத்தில், “இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இதுபோன்ற நல்ல விஷயங்கள் இன்னும் நடந்து கொண்டிருப்பது எனக்கு அதிர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது; இதற்காகவே எனக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த லட்சக்கணக்கான நெட்டிசன்கள், இந்தியாவின் இந்த எதார்த்தமான நேர்மையைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பல இந்திய இணையவாசிகள் தங்களுக்கு நடந்த இது போன்ற சுவாரசியமான, நேர்மையான சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். காய்கறி வியாபாரிகள் முதல் மொபைல் போனைத் தவறவிட்ட மருந்தகங்கள் வரை, இந்தியாவில் உள்ள எளிய மனிதர்கள் பிறர் பொருட்களைப் பத்திரமாகத் திருப்பித் தருவது என்பது மிகவும் சாதாரணமான ஒன்றுதான் என்று அவர்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர். “இது இந்தியாவில் மட்டுமே சாத்தியம்” என்றும், நாட்டின் மீதான நேர்மறையான பார்வையைப் பகிர்ந்து வரும் டொமினிகாவிற்குத் தங்களது வாழ்த்துகளையும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Visaka

Recent Posts

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

1 minute ago

ஐயோ… காதலால் சீரழிந்த வாழ்க்கை?… அனுபமாவுக்கு நேர்ந்த கொடுமை… இணையத்தை அதிர வைத்த… ரேகா நாயரின் பேட்டி…!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான் சந்தித்த நச்சுத் தன்மையுள்ள காதல் உறவைப் பற்றியும், அதில் ஏற்பட்ட மன உளைச்சல்கள் பற்றியும்…

2 minutes ago

“ப்ளீஸ் என்னை விட்டுரு…” கெஞ்சிய மனைவி… ரகசிய திருமணத்தால் தாலியை கழற்றி… மாமியாரை கொடூரமாக கொன்ற வாலிபர்…. பயங்கர சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையத்தில் வாடகைக்கு வசித்து வந்த பழனிசாமி - தனலட்சுமி தம்பதியின் 21 வயது…

4 minutes ago

தாய்க்கு வந்த சந்தேகம்… பிறந்தநாள் பார்ட்டியில் தொடங்கிய விபரீதம்… சிறுமிக்கு மது கொடுத்து ஓராண்டாக வன்கொடுமை… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி ஒருவருக்கு, கடந்த ஓராண்டாக தொடர்ந்து பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு…

10 minutes ago

“ரயிலில் ஆடையை கழற்றி ரகளை…” டிசிடி, ஆர்பிஎஃப் போலீசாரை பிளேடால் அறுத்த பிரபல நடிகை…! ஓடும் ரயிலில் நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

மும்பையைச் சேர்ந்த சின்னத்திரை மற்றும் இணையத்தொடர் நடிகையான அந்தரா பானர்ஜி, ஆரவளி விரைவு ரயிலில் சூரத் நோக்கிப் பயணித்துள்ளார். ஏசி…

18 minutes ago