“இந்தியாவில் இதெல்லாம் நடக்குமா?”… டெல்லி மருந்தகத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்… மிரண்டு போன வெளிநாட்டுப் பெண்… வைரலாகும் வீடியோ…!

Spread the love

டெல்லியில் மருந்துக்கடைக்காரர் ஒருவரின் நேர்மையைப் பாராட்டி, போலந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி, பலரது இதயங்களை வென்று வருகிறது. இந்தியாவில் நீண்ட நாட்களாக வசித்து வரும் டொமினிகா படாலாஸ்-கல்ரா என்ற அந்தப் பெண், நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு மருந்தகத்தில் சில மருந்துகளை வாங்கினார். ஆனால், அவசரத்திலோ அல்லது மறதியிலோ அந்த மருந்துப் பையை அங்கேயே விட்டுவிட்டு டெல்லியை விட்டும் வெளியே சென்றுவிட்டார். நான்கு நாட்கள் கழித்து மீண்டும் அந்த கடைக்குச் சென்றபோது, இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் தன் மருந்துகள் பத்திரமாக இருக்குமா என்ற சந்தேகம் அவருக்குள் எழுந்துள்ளது.

https://www.instagram.com/reel/DZ4-yRqAiyD/?utm_source=ig_embed&ig_rid=AzVke1m9L18EPenSpSIlbtx

மருந்தகத்தை அடைந்த டொமினிகா, கடைக்காரரிடம் தனது மருந்துப் பையைப் பற்றி விசாரித்தபோது, அந்த கடைக்காரர் உடனடியாக அந்தப் பையை நினைவு கூர்ந்து, அதனை அப்படியே பத்திரமாக எடுத்து அவரிடம் நீட்டியுள்ளார். இதனால் ஆச்சரியமும் நெகிழ்ச்சியும் அடைந்த டொமினிகா, தனது சமூக வலைதளப் பக்கத்தில், “இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இதுபோன்ற நல்ல விஷயங்கள் இன்னும் நடந்து கொண்டிருப்பது எனக்கு அதிர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது; இதற்காகவே எனக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த லட்சக்கணக்கான நெட்டிசன்கள், இந்தியாவின் இந்த எதார்த்தமான நேர்மையைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பல இந்திய இணையவாசிகள் தங்களுக்கு நடந்த இது போன்ற சுவாரசியமான, நேர்மையான சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். காய்கறி வியாபாரிகள் முதல் மொபைல் போனைத் தவறவிட்ட மருந்தகங்கள் வரை, இந்தியாவில் உள்ள எளிய மனிதர்கள் பிறர் பொருட்களைப் பத்திரமாகத் திருப்பித் தருவது என்பது மிகவும் சாதாரணமான ஒன்றுதான் என்று அவர்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர். “இது இந்தியாவில் மட்டுமே சாத்தியம்” என்றும், நாட்டின் மீதான நேர்மறையான பார்வையைப் பகிர்ந்து வரும் டொமினிகாவிற்குத் தங்களது வாழ்த்துகளையும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Visaka

Recent Posts

காதலிக்கு ஐபோன் கிப்ட் கொடுக்க காதலன் செய்த விபரீதம்… சிசிடிவியில் போலீஸ் பார்த்த அந்த ஒரு விஷயம்… சென்னையில் நடுராத்திரியில் அரங்கேறிய பரபரப்பு…!

சென்னையில் காதலியின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த ஐபோன் வாங்கிப் பரிசளிப்பதற்காக, சினிமா பாணியில் முகம் மற்றும் பைக்கின் நம்பர் பிளேட்டை…

13 minutes ago

இபிஎஸ்க்கு விழுந்த மரண அடி…. தவெகவில் இணைகிறார்.. சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. CM விஜய்க்கு இன்ப அதிர்ச்சி…!

அதிமுகவிலிருந்து விலகிய முக்கிய தலைவர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் நாளை தமிழக வெற்றிக் கழகத்தில்…

17 minutes ago

மும்பை இந்தியன்ஸில் இருந்து ரோகித் சர்மா அவுட்… பின்னணியில் இருக்கும் அந்த இளம் வீரர்… ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…!

ஐபிஎல் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது டிரேடிங் குறித்த செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. குறிப்பாக, கடந்த இரண்டு சீசன்களாக மும்பை…

21 minutes ago

“அதிமுகவுக்கு அடுத்த மரண அடி… பதவி ராஜினாமா”… அடுத்த 24 மணி நேரத்தில் விஜய்யை சந்திக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்… அதிரப்போகும் தமிழக அரசியல்….!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், அக்கட்சியிலிருந்து விலகி முதல்வர் விஜய்யின் தமிழக…

36 minutes ago

திருச்சி கிழக்கில் லாரன்ஸ் போட்ட திடீர் யூ-டர்ன்… பின்னணியில் இருக்கும் த்ரிஷா?… உடைந்தது பகிர் உண்மை… அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தான். முதல்வர் விஜய் வெற்றி பெற்று,…

37 minutes ago