ஒடிசா மாநில அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில், ‘ஹம் தில் தே சுகே சனம்’ என்ற புகழ்பெற்ற பாலிவுட் திரைப்படத்தின் ‘நிம்புடா நிம்புடா’பாடல் அச்சடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானி நாட்டுப்புறக் கலையை அடிப்படையாகக் கொண்ட இப்பாடல், எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, கல்வித்துறையின் மீதான கடுமையான விமர்சனங்களையும் கேலிகளையும் எழுப்பியுள்ளது.
இது ஒரு தனிப்பட்ட தவறு அல்ல என்பதும், ஒடிசாவின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) வெளியிட்ட புத்தகங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிழைகள் இருப்பது தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, எட்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களில் மட்டும் 705 பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன. கர்நாடக சட்டமன்றக் கட்டிடம் ஒடிசா சட்டமன்றம் எனவும், சர் ஐசக் நியூட்டன் உலகின் “சிறந்த விமானி” (Pilot) எனவும், கர்நாடகாவின் ஹம்பி தளம் கொனாரக் சூரியக் கோவில் எனவும் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற பல வரலாற்று மற்றும் அறிவியல் பிழைகள் அடுக்கடுக்காக வெளிவந்துள்ளன.
இவ்விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் அரசியல் மற்றும் சமூக அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி இந்த குளறுபடிகள் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளார். அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில பள்ளி மற்றும் வெகுஜனக் கல்வி அமைச்சர் நித்யானந்த கோண்ட் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வண்ணம், அனைத்து பிழைகளும் திருத்தப்பட்ட புதிய பாடப்புத்தகங்கள் விரைவில் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…