“வீட்டுக்கு போனா நம்மள பிரிச்சிடுவாங்க” கள்ளக்காதல் ஜோடி எடுத்த முடிவு… வாயில் நுரை தள்ளியவாறு போலீஸ் ஸ்டேஷனில் கதறல்… தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்..!!

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப்புதூர் பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன். இவருடைய மகன் தங்கவேல்சாமி. 28 வயதான இவர் கார் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளார்கள். தங்கவேல்சாமி நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள உறவினரின் வீட்டில் தான் இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது எதிர் வீட்டில் வசித்து ஆட்டோ டிரைவர் சுப்பையா மனைவி பார்வதியோடு இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கும் இரண்டு மகன்கள் உள்ளார்கள். இருப்பினும் தங்கவேல் சாமியுடன் பேசி பழகி வந்துள்ளார் பார்வதி. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி உள்ளது .இதனை அடுத்து குடும்பத்தினர் அவர்களை கண்டித்துள்ளார்கள் .

பார்வதி தன்னுடைய வீட்டில் இருந்து வெளியேறி தங்கவேல் சாமியுடன் சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலையில் தங்கவேல்சாமி குலசேகரபட்டினத்திற்கு காரில் பார்வதி அழைத்து சென்றுள்ளார். நம் வீட்டிற்கு சென்றால் குடும்பத்தினர் நம்மை பிரித்து விடுவார்கள். எனவே நாம் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளார்கள். அதன்படி இருவரும் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி குடித்துள்ளனர்.

பிறகு வாயில் நுரை தள்ளுபடி போராடி அவர்கள் குலசேகரப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார்கள். காரை வெளியே நிறுத்திய அவர்கள் நாங்கள் இருவரும் விஷம் குடித்து விட்டோம். எங்களை காப்பாற்றுங்கள் என்று  அழுதவாறு சென்றார்கள். உடனே அங்கிருந்து போலீசார் அதிர்ச்சி அடைந்து இரண்டு  பேரையும்  மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். ஆனால் அவர்கள் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு… விஜயை நேரில் சந்திக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்… இன்று தமிழக அரசியலில் வெடிக்கும் பூகம்பம்…!

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சந்தித்த தொடர் தோல்விகள், அக்கட்சியில் மிகப்பெரிய தலைமை மாற்றத்திற்கான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு முறை…

4 minutes ago

3-ஆவது பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.. நாங்கள் மறுத்தோம் ஆனால் ஆளுநர் தான்.. பகீர் விளக்கும் கொடுத்த ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது பாடலாகப் பாடுவதில் தவெக தலைமையிலான அரசுக்கு உடன்பாடு இல்லை என்று அமைச்சர்…

6 minutes ago

தினமும் 13 பாட்டில்” கல்லீரல் அழுகிய நிலையிலும் விடாத அந்த பழக்கம்… கலாபவன் மணியின் மரணத்தின் பின்னணியில் பகீர் உண்மை.!

கேரளத் திரையுலகில் ஆட்டோ ஓட்டுநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, மிமிக்ரி கலைஞராகவும், பின் தேசிய விருது பெற்ற நடிகராகவும் உயர்ந்தவர்…

12 minutes ago

மொத்தப் பெயரையும் கெடுத்துட்டாங்க.. இனி அந்தப் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கமாட்டேன்… உயிருக்கு பயந்து நடுங்கிய நடிகை.. பகீர் கிளப்பும் ரகசியங்கள்..!!

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு முறை போட்டியாளராகப் பங்கேற்ற நடிகை ஹரிதேஜா, அண்மையில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு ஏற்பட்ட கசப்பான…

15 minutes ago

“வாழ்த்து சொன்ன அடுத்த நொடியே மரண அடி” சூர்யகுமாருக்கு குழந்தை பிறந்ததற்கு விஷ் செய்த கோலி… அப்புறம் செஞ்ச காரியம் தான் ‘பகீர்’ ட்விஸ்ட்..!!

சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய களம் இறங்கியபோது, அவருக்குக் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்திக்காக விராட் கோலி முதலில் தனது…

15 minutes ago

“நீ எங்கிருந்தாலும் என் தம்பிடா” மும்பையை கதறவிட்ட குருணால் பாண்டியா… ஆட்டம் முடிந்ததும் பொல்லார்டை கட்டிப்பிடித்து அழுதது ஏன்..? வைரல் வீடியோ..!!

ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தத் திரில் வெற்றிக்குப் பிறகு, ஆர்சிபி வீரர் குருணால் பாண்டியா தனது பழைய அணியான மும்பை இந்தியன்ஸின்…

18 minutes ago