“850 கிராம் தங்கம், வைர நகைகளுடன் எஸ்கேப்”…. அந்தரங்க வீடியோவால் தொழிலதிபர் மனைவிக்கு நேர்ந்த கதி… சென்னையில் ஒரு திகில் சம்பவம்….!

Spread the love

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம், அதே குடியிருப்பில் குடியேறிய வாலிபர் ஒருவர் நெருங்கிப் பழகி, சுமார் 850 கிராம் தங்கம் மற்றும் வைர நகைகளை மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு அங்கு குடியேறிய சங்கீதா மற்றும் அவரது மகன் திலீப் ஆகியோருடன் அந்தப் பெண்ணுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பைப் பயன்படுத்திக் கொண்ட திலீப், அந்தப் பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவை ஏற்படுத்திக் கொண்டு, காலப்போக்கில் தனது பணத்தேவைக்காக அவரிடமிருந்து சிறுகச் சிறுக நகை மற்றும் பணத்தைப் பெற்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து சுமார் 850 கிராம் தங்கம், 120 கிராம் வைர நகைகள், 2.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தைப் பெற்றுக்கொண்ட திலீப், அவற்றை திருப்பித் தர மறுத்ததோடு விபரீத செயல்களில் இறங்கியுள்ளார். இருவரும் தனிமையில் இருந்தபோது எடுக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி, அந்தப் பெண்ணை மிரட்டி மேலும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் பெண்ணின் கணவருக்குத் தெரியவரவே, அவர் திலீப்பிடம் நகைகளைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.

இதற்கிடையே, தங்களது மோசடி அம்பலமானதை உணர்ந்த திலீப்பும் அவரது தாயாரும், குடியிருப்பிலிருந்து ரகசியமாக வீட்டை காலி செய்துவிட்டுத் தலைமறைவாகினர். பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும், உள்ளூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். தனது நகைகளை மீட்டுத் தருமாறும், அந்தரங்கப் படங்களைக் காட்டி மிரட்டும் திலீப் மற்றும் அவரது தாய் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தனது புகாரில் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திலீப் ஒரு தொடர் குற்றவாளி என்பது தெரியவந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சமூக வலைத்தளம் மூலமாக இளம்பெண்களிடம் பழகி, அவர்களுக்கு விமானப் பணிப்பெண் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கும் அவர் மீது நிலுவையில் உள்ளது. தற்போது தொழிலதிபர் மனைவியை ஏமாற்றிய வழக்கில் தலைமறைவாக உள்ள திலீப் மற்றும் அவரது தாயைத் தேடி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

4 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

4 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

4 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

4 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

5 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

5 மணத்தியாலங்கள் ago