Categories: சினிமா

ஆகஸ்ட் 8-ல் நிச்சயம் முடிக்க காரணம் இதுதான்.. அவங்க ரெண்டு பேரும்.. விளக்கமளித்த நாகர்ஜுனா..!!

Spread the love

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா கடந்த 2009-ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவும் சமந்தாவும் நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017-ஆம் ஆண்டு கோவாவில் வைத்து சமந்தாவும் நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக சமந்தா கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டபூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இருவரும் பிரிந்ததற்கான காரணத்தை இன்று வரை வெளிப்படையாக கூறவில்லை. மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு நோயில் இருந்து மீண்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

இதற்கிடையே நாக சைதன்யாவும் பிரபல நடிகை சோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் செய்திகள் உலா வந்தது. இது குறித்து இருவரும் விளக்கம் அளிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. சமந்தா ஆகஸ்ட் 8-ஆம் தேதி தான் நாக சைதன்யாவிடம் தனது காதலை கூறினாராம்.

எனவே அதே தேதியில் வேண்டுமென்றே நிச்சயதார்த்தத்தை வைத்திருப்பதாக இணையத்தில் நெட்டிசன்கள் பேசி வந்தனர். இந்த நிலையில் நாகர்ஜுனா தனது மகனுக்கு நிச்சயம் நடத்தி வைத்தது குறித்து பேசி இருந்தார். அவர் கூறியதாவது, ஆகஸ்ட் 8ஆம் தேதி ரொம்பவே நல்ல நாளாக இருந்தது. அதனால் தான் அன்றைய நாளில் அவசர அவசரமாக நிச்சயதார்த்தத்தை நடத்தினோம். சோபிதாவும் நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர். இதனால் உடனடியாக நிச்சயத்தை முடித்து விட்டோம். திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என கூறியுள்ளார்.

admin

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

6 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

6 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

6 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

6 மணத்தியாலங்கள் ago