388 ரன்கள் டார்கெட்… தசைபிடிப்போடு லார்ட்ஸை கதறவிட்ட ரோகித் சர்மா… ’51 ஆண்டுகளுக்கு பிறகு ‘… கிரிக்கெட் உலகத்தை அதிரவிட்ட சர்மா…!

Spread the love

இங்கிலாந்துக்கு எதிரான தீர்மானமிக்க மூன்றாவது ஒருநாள் போட்டியில், 388 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி போராடி தோல்வியடைந்தாலும், முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் அபாரமான சதம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. கேப்டன் சுப்மன் கில்லுடன் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 147 ரன்கள் சேர்த்த ரோகித், ஆரம்பத்தில் நிதானம் காட்டி பின்பு அதிரடிக்கு மாறினார். தசைபிடிப்பால் அவதிப்பட்ட நிலையிலும் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு 110 பந்துகளில் 138 ரன்கள் விளாசி, தனது 34-வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் மூலம் கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில், 51 ஆண்டு கால ஒருநாள் போட்டிகளின் வரலாற்றில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன் 2004-இல் சவுரவ் கங்குலி அடித்த 90 ரன்களே இங்கு ஒரு இந்தியரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. மேலும், 39 வயது 80 நாட்களில் இச்சதத்தை அடித்ததன் மூலம், இந்திய அணிக்காக மிக அதிக வயதில் ஒருநாள் சதம் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் (38 வயது 327 நாட்கள்) இவர் முறியடித்துள்ளார்.

ஃபார்ம் அவுட் காரணமாக லார்ட்ஸ் போட்டியோடு ரோகித் சர்மா ஓய்வு பெறப்போவதாக உலா வந்த வதந்திகளுக்கு இந்த இன்னிங்ஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய கேப்டன் சுப்மன் கில், “ரோகித் சர்மா ஓய்வு குறித்து அணியிடம் எதுவும் கூறவில்லை; ஊடகங்களில் தான் இதுபற்றி பேசப்படுகிறது தவிர, அணிக்குள் அதுபோன்ற எந்த விவாதமும் நடக்கவில்லை” என தெளிவுபடுத்தினார். இதன் மூலம் ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடுவதும், 2027 உலகக்கோப்பை வரை களத்தில் நிற்பதில் அவர் உறுதியாக இருப்பதும் தெளிவாகியுள்ளது.

Visaka

Recent Posts

“பாவம் அந்த வாயில்லா ஜீவன்…” தினமும் நாயை அடித்து சித்திரவதை செய்த நபர்…. ஆப்பு வைத்த தன்னார்வலர்கள்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள சிங்கல்பூர் கிராமத்தில், அனில் குப்தா என்பவர் தனது சொந்த வளர்ப்பு நாயை தினமும்…

6 minutes ago

ஐயோ… பாப்பாவுக்கு என்ன ஆச்சு?… படிக்கட்டில் வழுக்கி விழுந்த… 4-ஆம் வகுப்பு சிறுமி பரிதாப பலி… அதிர்ச்சியில் பெற்றோர்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் சோகச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு 4-ஆம் வகுப்பு படித்து…

6 minutes ago

யோவ் நிறுத்துயா… காரில் சிக்கிய பைக்கை… அலற அலற அரை கி.மீ இழுத்துச் சென்ற முதியவர்… டெல்லியில் நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!!

தெற்கு டெல்லியின் ஆர்.கே. புரம் பகுதியில் புதன்கிழமை இரவு 10 மணியளவில் அதிவேகமாக வந்த ஹோண்டா அமேஸ் கார் ஒன்று,…

17 minutes ago

நடுவானில் பரபரப்பு…! “சட்டை கிழிந்து தொங்க விமானத்தில் கடும் சண்டை…” 100-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர் ஆபத்தில்…! திக் திக் வீடியோ வைரல்…!!

நூற்றுக்கணக்கான பயணிகளுடன் நடுவானில் அதிவேகத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றில், எதிர்பாராதவிதமாகப் பயணிகள் சிலருக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. சீட்…

28 minutes ago

டேய் அங்க பாருடா… எவ்ளோ பெரிய பாம்பு?… நள்ளிரவில் ஐடி நிறுவன வாசலில்… புகுந்த ராட்சச மலைப்பாம்பு… பதறிப்போன ஊழியர்கள்… பதறவைக்கும் வீடியோ…!!

ஹைதராபாத்தில் உள்ள துர்க்கம் செருவு பகுதிக்கு அருகில் அமைந்துள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்திற்கு வெளியே, செப்டம்பர் 17…

33 minutes ago

ஐயோ கடவுளே… கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்திலிருந்து பறந்து விழுந்த கார்… துடிதுடித்து பரிதாபமாக உயிரை விட்ட இளம்பெண்… பெங்களூரில் அரங்கேறிய கோர விபத்து…!!

பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையில் மண்டியா அருகே உள்ள உம்மடஹள்ளி கேட் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. அதிவேகமாகச்…

40 minutes ago