ஒரு கார்ப்போரேட் ஊழியர் தனது மனைவிக்கு முதல் பிரசவம் என்பதால், இரண்டு நாட்கள் விடுப்பு கேட்டு மேலாளருக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பியுள்ளார். ஆனால், அந்த மேலாளர் விடுப்பு வழங்க மறுத்து, “இப்போது லீவு கொடுக்க முடியாது, பிறகு எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளார். அத்துடன், மாற்று வழியாக “மருத்துவமனையில் இருந்தே வேலை பார்க்க முடியுமா?” என்றும், “மனைவியின் பிரசவத்துக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்றும் குதர்க்கமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஊழியர் தனது மனைவிக்கு உதவியாக இருக்க விடுப்பு தேவை என்று மீண்டும் வலியுறுத்திய பிறகே, மேலாளர் மனமில்லாமல் விடுப்பு அளித்துள்ளார். இந்த வாட்ஸ்அப் உரையாடலை அந்த ஊழியர் ரெடிட் தளத்தில் பகிர்ந்த நிலையில், இது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பின்னரும், பிரசவக் காலத்தில் கூட ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க மறுக்கும் இந்திய மேலாளர்களின் அணுகுமுறை குறித்து பலரும் விமர்சனங்களைத் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…