VIDEOS
பையா அந்த பானிபூரி எடு…! அப்படியே கொஞ்சம் ரசத்தை ஊத்து…. ருசித்து சாப்பிட்ட யானை…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…
சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்கள் தினம் தினம் வைரலாகி வருகின்றது. சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைப்பதாகவும், சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் உள்ளது. அதிலும் விலங்குகள் செய்யும் அட்டகாசம் தொடர்பான வீடியோக்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து வைரலாகி வருகின்றது.
தினந்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளிவரும் நிலையில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு ஈர்க்கப்படும் வீடியோவாக இருக்கும். அந்த வகையில் வட இந்தியாவில் யானை ஒன்று பானி பூரி சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. வட இந்தியாவில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி என்றால் அது பாணி பூரி தான்.
தற்போது தமிழகத்தில் கூட பல இடங்களில் பானிபூரியை அனைவரும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் இங்கே ஒரு யானை பானி பூரி மிகவும் ரசித்து சாப்பிடுகின்றது. அசாமின் தேஜ்பூரில் உள்ள ஒரு சாலையோர கடையில் ஒரு நபர் பானி பூரியை விற்பனை செய்து வருகிறார். அங்கு வந்த யானை ஒன்று பானி பூரி வேண்டுமென்று அடம்பிடித்து நின்று அந்த பானி பூரி கடைக்காரர் கொடுத்த பாணி பூரியை ருசித்து சாப்பிடுவதை பார்க்கலாம்.