அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் அடுத்தடுத்து விலகி வரும் சூழலில், கட்சிக்குள்ளான கட்டமைப்பை பலப்படுத்தும் நோக்கில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய நிர்வாகிகளை நியமித்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். அதன்டி, அண்மையில் பாமகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த பொங்கலூர் மணிகண்டன் கட்சியின் புதிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கட்சியின் முக்கியப் பொறுப்புகளான அமைப்புச் செயலாளராக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்பி ஜக்கையனும், கொள்கை பரப்புத் துணைச் செயலாளராக தருமபுரியைச் சேர்ந்த டி.கே. ராஜேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.எஸ் அறிவித்துள்ளார். ஒருபுறம் கட்சியின் சீனியர்கள் சிலர் விலகிச் செல்வது சலசலப்பை ஏற்படுத்தினாலும், மறுபுறம் புதிய நிர்வாகிகளை நியமித்து கட்சியின் செயல்பாடுகளை தொய்வின்றி எடப்பாடி பழனிசாமி நகர்த்தி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…
தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…
வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…
சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…
பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…