அதிமுகவில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்… எடப்பாடி பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!

By SATHISH R on ஆடி 2, 2026

Spread the love

அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் அடுத்தடுத்து விலகி வரும் சூழலில், கட்சிக்குள்ளான கட்டமைப்பை பலப்படுத்தும் நோக்கில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய நிர்வாகிகளை நியமித்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். அதன்டி, அண்மையில் பாமகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த பொங்கலூர் மணிகண்டன் கட்சியின் புதிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கட்சியின் முக்கியப் பொறுப்புகளான அமைப்புச் செயலாளராக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்பி ஜக்கையனும், கொள்கை பரப்புத் துணைச் செயலாளராக தருமபுரியைச் சேர்ந்த டி.கே. ராஜேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.எஸ் அறிவித்துள்ளார். ஒருபுறம் கட்சியின் சீனியர்கள் சிலர் விலகிச் செல்வது சலசலப்பை ஏற்படுத்தினாலும், மறுபுறம் புதிய நிர்வாகிகளை நியமித்து கட்சியின் செயல்பாடுகளை தொய்வின்றி எடப்பாடி பழனிசாமி நகர்த்தி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.