“அதிமுகவில் அதிரடி திருப்பம்”… சபாநாயகரிடம் பறந்த கடிதம்.. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் திரண்ட 17 தளபதிகள்…!

Spread the love

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் செல்லாது என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பகிரங்கமாக அறிவித்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும், தோல்விக்கான காரணங்களை ஆராய உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, மே 5-ம் தேதி முதல் கட்சியில் கருத்து வேறுபாடுகள் முற்றியுள்ள நிலையில், அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட நீக்கங்கள் மற்றும் புதிய நியமனங்கள் சட்டப்படி செல்லாது என்பது வேலுமணி தரப்பின் வாதமாக உள்ளது.

இந்த மோதலின் ஒரு பகுதியாக, எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட 17 முக்கிய நிர்வாகிகளின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வேலுமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் சட்டசபை சபாநாயகரைச் சந்தித்து சட்டசபைக் குழுத் தலைவர் மற்றும் கொறடா தொடர்பாகக் கடிதம் அளித்துள்ளனர். கட்சி அமைப்பு வேறு, சட்டசபை அமைப்பு வேறு என்று கூறியுள்ள வேலுமணி, எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அந்தந்தப் பதவிகளிலேயே நீடிப்பார்கள் என்று அறிவித்துள்ளது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவை மீண்டும் வலுப்படுத்த சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை ஒன்றிணைக்க வேண்டும் என்ற விவாதங்களும் தற்போது சூடுபிடித்துள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முக்குலத்தோர், வன்னியர் மற்றும் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் ஓரணியில் திரண்டுள்ளதால், அவர் கட்சியில் ஓரங்கட்டப்படலாம் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. விஜயபாஸ்கர், சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி ஆகிய மூவரின் கூட்டுத் தலைமையின் கீழ் இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதால், அதிமுகவில் அதிகார மைய மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய வேலுமணி, எடப்பாடி பழனிசாமி ‘போங்க போங்க’ என்று எல்லாரையும் நீக்கிக் கொண்டிருக்காமல், ‘வாங்க வாங்க’ என்று அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். திமுகவை வீழ்த்த அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம் என்றும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்துவிட்டு பொதுக்குழுவின் மூலம் ஜனநாயக ரீதியாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களால் தமிழக அரசியலில் அதிமுகவின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் முன்னைவிட அதிகமாகியுள்ளன.

Nanthini

Recent Posts

“1230 கோடி செலவு… காலி கஜானா”… எப்படிச் சாத்தியம்?… முதல்வரின் அறிவிப்பைச் சல்லடை போட்டுத் துளைக்கும் திமுக…!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி (DA) உயர்வை முதல்வர் விஜய் அறிவித்துள்ளது, மாநில அரசியலில்…

6 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. தமிழக அரசின் மகிழ்ச்சி செய்தி…. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் ₹1,000…

9 minutes ago

ECR-ல் இறால் பிடிக்கச் சென்றபோது நடந்த விபரீதம்!… சிறுவனின் உயிரைக் குடித்த சேறு… கதறி துடிக்கும் பெற்றோர்… சென்னையில் சோக சம்பவம்…!!!

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) கரிகாட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் - செல்லமீனா தம்பதியின் மகன் பிரகலாதன் (13).…

11 minutes ago

நாகப்பட்டினத்தில் இரட்டைக்கொலை பயங்கரம்… ஊரே திரண்டு நின்ற காட்சிகள்… வெவ்வேறு இடங்களில் சடலங்கள் மீட்பு… வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்….!!

நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இரண்டு கொலை சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. நாகை பழைய…

28 minutes ago

தந்தை, தாத்தா, சகோதரர்கள் என வரிசை கட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி… பெற்ற தாயே செய்த துரோகம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

மேற்கு சசெக்ஸ் பகுதியில் ஒரு சிறுமிக்கு எதிராக நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமை வழக்கு, உலகையே உலுக்கியுள்ளது. ஆறு…

34 minutes ago

வளர்ப்பு நாயுடன் கொடூரம்… கணவன் வீடியோ எடுக்க மனைவி செய்த அருவருப்பான செயல்… புளோரிடாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த தம்பதியினர், வளர்ப்பு நாயுடன் பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டது மற்றும் குழந்தைகள் ஆபாசப் படங்களை…

44 minutes ago