தமிழக அரசியல் களம் தற்போது 2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பால் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அதிமுக – பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் அதிமுகவையும் அதன் தலைமையையும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிசாமி தனது பிடியை இறுக்கியுள்ளார். அண்ணாமலையை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் தொடங்கிய அதிமுகவின் வியூகம், தற்போது நயினார் நாகேந்திரன் தலைவரானது வரை வந்து நின்றது, அண்ணாமலையின் அரசியல் செல்வாக்கை கூட்டணிக்குள் கேள்விக்குறியாக்கியுள்ளது.
குறிப்பாக, அண்ணாமலைக்கு செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படும் கோவை மற்றும் அவரது சொந்த ஊரான கரூர் மாவட்டங்களில், பாஜகவுக்குத் தேவையான தொகுதிகளை ஒதுக்க அதிமுக மறுத்துவிட்டது. கோவையில் சிட்டிங் எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்காக ஒரே ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை விரும்பிய இதர தொகுதிகளைத் தர மறுத்து அவருக்கு ‘செக்’ வைத்துள்ளார். இதனால் தான் போட்டியிட விரும்பிய தொகுதிகள் கிடைக்காத விரக்தியில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அண்ணாமலை டெல்லி தலைமைக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது, அதிமுக ஒரு கட்சியே இல்லை என்றும், தேர்தலுக்குப் பிறகு அக்கட்சி காணாமல் போய்விடும் என்றும் அண்ணாமலை ஆக்ரோஷமாகப் பேசி வந்தார். ஆனால், டெல்லி தலைமை தற்போது அதிமுகவின் தயவு இன்றி தேர்தலைச் சந்திப்பது கடினம் என உணர்ந்து இபிஎஸ்-உடன் சமாதானம் செய்துகொண்டது. இதுவே எடப்பாடி பழனிசாமிக்குச் சாதகமாக அமைந்தது. அன்று தன்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசிய அண்ணாமலையை, இன்று தேர்தல் களத்தில் போட்டியிடக் கூட முடியாத அளவிற்குத் தந்திரமாக ஓரங்கட்டி தனது அரசியல் முதிர்ச்சியை அவர் நிரூபித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அண்ணாமலையின் தற்போதைய நிலைக்கு அவரது ‘அரசியல் முதிர்ச்சியின்மை’ மற்றும் தேவையற்ற விமர்சனங்களே காரணம் என பாஜகவின் ஒரு தரப்பினரே முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்ற தாரக மந்திரத்தை அண்ணாமலை மறந்ததன் விளைவை இப்போது அனுபவித்து வருகிறார். தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின் தேர்தலில் போட்டியிடவில்லை என அவர் அறிவித்திருந்தாலும், டெல்லி தலைமை தலையிட்டு ஏதேனும் மாற்றம் செய்யுமா அல்லது அண்ணாமலை இந்தத் தேர்தலில் முழுமையாக டம்மியாக்கப்படுவாரா என்பதுதான் தற்போதைய தமிழக அரசியலின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் (AAP) முக்கிய முகமாகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்த ராகவ் சதா, திடீரென அக்கட்சியிலிருந்து விலகி பாரதிய…
ஆயிரக்கணக்கான எறும்புகளை உயிரோடு தீயிட்டு எரிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு நபர்…
பாலிவுட் நடிகர் அன்னு கபூர், நடிகை தமன்னாவின் உடல் தோற்றம் குறித்துப் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 'Aaj…
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வேட்பாளர்களின் சொத்து விவரங்களைச் சரிபார்க்கும் நடைமுறை தொடங்கப்படும் என்று வருமான வரித்துறை (IT) சென்னை உயர்…
உலக அளவில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்களால் தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொட்டு வரும்…
பாபநாசம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிஸ் பாத்திமா மற்றும் அக்கட்சியினர் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு அக்கட்சியின்…