தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. பல கட்சிகளும் தங்களுடைய வலிமையை உறுதிப்படுத்த புதிய முகங்களை அணுகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கரூர் சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விஜயை தங்கள் பக்கம் இருக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இபிஎஸ் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டதாக கூறி விஜய் உடன் கூட்டணி குறித்த சாத்தியத்தை சூசகமாக வெளிப்படுத்தி இருந்தார். அதிமுக கூட்டணியில் இணைய விஜய்க்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டாலும் இதுவரை விஜய் சார்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். முதல்வராக்கிய சசிகலாவுக்கே துரோகம் செய்த ஈபிஎஸ் ஒருவேளை அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி வெற்றி பெற்றால் விஜயையும் ஓரம் கட்டி விடுவார். நானும் சசிகலாவும் கட்சியில் இருந்தால் இபிஎஸ் பதவிக்கு ஆபத்து என்பதால் தான் எங்களை கட்சியிலிருந்து நீக்கினார். விஜய் கூட்டணி அமைத்தால் அவருக்கும் இதே நிலைதான் என்ற டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார். இவருடைய இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…