சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன் என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை இன்று காலை போலீசார் கைது செய்தனர். கைதைத் தொடர்ந்து அவரிடம் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
சர்க்கரை நோயாளியான மார்க்கண்டேயனுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் வைத்து விசாரணை தொடரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது மொத்தம் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் நடுவே, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, மார்க்கண்டேயன் அங்கு நின்றிருந்த பத்திரிகையாளர்களைப் பார்த்து கூச்சலிட்டார். அப்போது “போலீசார் துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டுவதாக” அவர் சத்தமிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே உஷாரான போலீசார் அவரைத் தடுத்து விரைவாக மருத்துவமனைக்குள்ளே அழைத்துச் சென்றனர்.
பிரபல நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்', பல்வேறு சென்சார் பிரச்சனைகளைக் கடந்து நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.…
விசாகப்பட்டினத்தின் அக்யையபாலம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சோகமான சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த வாகனம்…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் இறந்த நிலையில் கோழிக்குஞ்சு இருந்த…
தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெ அரசு, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பல்வேறு…
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் எளிதாகச் சமைக்கக்கூடிய உடனடி நூடுல்ஸ் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும்,…
நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியாகவுள்ள "ஜனநாயகன்" திரைப்படத்தின் கொண்டாட்டங்களைச் சமூகப் பொறுப்புணர்வுடன் இணைக்கும் வகையில், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்…