எஸ்.பி. வேலுமணி வழக்கில் திடீர் திருப்பம்… ரூ.98 கோடி டெண்டர்…. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் போட்ட ‘ரெட் கார்டு…!

Spread the love

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ₹98 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில், 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளிக்கும் கோப்புகளை கடந்த பிப்ரவரி மாதம் முதல் நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற முன்னாள் பொதுத் துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் காணொலி வாயிலாக ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், தற்போதைய பொதுத் துறை செயலாளரும் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையில், மத்திய அரசு கேட்ட விளக்கங்களுக்கு கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதியே பதிலளித்து பொதுத் துறை செயலாளருக்குக் கடிதம் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஐந்து மாதங்களாக இந்த விவகாரத்தில் பொதுத் துறை தரப்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கோப்புகள் முடக்கி வைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, சட்டமன்றத் தேர்தல் அல்லது ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களைச் சாக்காக ஏற்க முடியாது என்று காட்டமாகக் குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றம் தொடர்ந்து பல உத்தரவுகளைப் பிறப்பித்த போதிலும், இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் முடங்கிக் கிடப்பது குறித்து நீதிபதி தனது பலத்த அதிருப்தியைப் பதிவு செய்தார். மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கு அரசு இயந்திரமும் அதிகாரிகளும் முயற்சிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

இரவோடு இரவாக இணைந்தார்…. சசிகலாவின் ‘ரைட் ஹேண்ட்’ மாஸ் என்ட்ரி…. தவெகவில் இணைந்த முன்னணி வழக்கறிஞர்… ஆடிப்போன அதிமுக….!

சசிகலாவின் நம்பிக்கைக்குரிய வழக்கறிஞராகவும், அவரது சொத்துக் குவிப்பு வழக்கு, அதிமுக தொடர்பான சிவில் விவகாரங்கள் மற்றும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில்…

2 seconds ago

“எங்களுக்கும் மனசாட்சி இருக்குப்பா…!” – டெல்லி போராட்டத்தின் நடுவே தஞ்சம் கொடுத்த… ‘ப்ளூ டோக்காய்’ காபி கடையின் அதிரடி முடிவு…! பாராட்டும் நெட்டிசென்கள்…!!

டெல்லியின் ஜன்பத் பகுதியில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது, ‘ப்ளூ டோக்காய்’ காபி நிறுவனத்தின் கிளை…

15 minutes ago

“அய்யய்யோ… என்ன கொடுமை இது… அவனும் இந்த வீட்டுலதான் இருப்பான்…! காதலனுக்கு வீட்டில் இடம் கேட்ட மனைவி… மறுத்த கணவர் மீது கொடூரத் தாக்குதல்…! அதிர்ச்சியில் உறைந்துபோன ஊர் மக்கள்…!”

ஒரு குடும்பத்தின் அடித்தளத்தையே உலுக்கும் வகையில் அமைந்துள்ள இச்சம்பவம், உறவுகளின் புனிதத்தையும் மனித மதிப்புகளையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. 18 ஆண்டுகாலத் திருமண…

28 minutes ago

பகீர்… துடிதுடித்துப் போன உயிர்… மீண்டும் இரத்த வெள்ளத்தில்… காட்டுமயிலூர் சந்திப்பு…! இன்னும் எத்தனை உயிர்களைப் பலி வாங்கப் போகிறது இந்த மரணக் குழி…?

வேப்பூர் கூட்டு ரோடு அருகே உள்ள காட்டுமயிலூர் சந்திப்பில் பேருந்து மோதி இருசக்கர வாகன ஓட்டி உயிரிழந்த சம்பவம் மிகுந்த…

36 minutes ago

அடடா… தியேட்டருக்கே கூட்டிட்டு போகும் ஓனர்…! ‘ஜனநாயகன்’ பார்க்க ஊழியர்களுக்கு லீவ் கொடுத்து சர்ப்ரைஸ்…! திருப்பூர் நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு…!!

பிரபல நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்', பல்வேறு சென்சார் பிரச்சனைகளைக் கடந்து நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.…

9 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… தூக்கக் கலக்கத்தால் வந்த வினை… தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி… தொழிலாளி கொடூர பலி…!!

விசாகப்பட்டினத்தின் அக்யையபாலம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சோகமான சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த வாகனம்…

9 மணத்தியாலங்கள் ago