பிரபல நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’, பல்வேறு சென்சார் பிரச்சனைகளைக் கடந்து நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. எச்.வினோத் இயக்கத்தில், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரசியல் வருகை காரணமாக சினிமா துறையிலிருந்து விஜய் விலகும் சூழலில், திரையில் ‘மாண்புமிகு முதலமைச்சர் விஜய்’ என்ற டைட்டில் கார்டுடன் வெளியாகும் இப்படத்தைக் காண ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் இடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இப்படத்தின் வெளியீட்டைக் கொண்டாடும் வகையில், திருப்பூரில் மூன்று கிளைகளுடன் இயங்கி வரும் ‘ஃபுட்ஸ் பை டிகே சென்ட்ரல் ஹாஸ்பிடாலிட்டி சர்வீசஸ்’ தனது ஊழியர்களுக்கு ஜூலை 23 அன்று அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. விஜய்யின் திரைப் பயணத்தின் இறுதித் திரைப்படத்தை ஊழியர்கள் அனைவரும் திரையரங்கில் ஒன்றிணைந்து முதல் நாள் மாலைக் காட்சியைக் காண்பதற்காக இந்தச் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “சில நட்சத்திரங்கள் நம்மை மகிழ்விக்கின்றன; சில ஜாம்பவான்கள் ஒரு தலைமுறையையே வடிவமைக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், நமது குழந்தைப்பருவம், கனவுகள் மற்றும் வாழ்வின் நோக்கத்திற்கு உத்வேகம் அளித்த விஜய்யின் 183 நிமிடங்கள் கொண்ட இந்த இறுதி சினிமாப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நிறுவனம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…