#image_title
கடந்த 1995 ஆம் ஆண்டு ரிலீசான முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனர் சுந்தர்.சி திரையுலகில் தனது பயணத்தை தொடங்கினார். அந்த படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகளுக்கு இன்று மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
இதனை அடுத்து சுந்தர்.சி இயக்கிய முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, நாம் இருவர் நமக்கு இருவர், அருணாச்சலம், மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்காக ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. சுந்தர்.சி இயக்கிய படங்கள் காமெடி கலந்த மசாலா காட்சி நிறைந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும். கலகலப்பு படத்திலும் சுந்தர்.சி முழுக்க முழுக்க காமெடி காட்சிகளாக கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
இந்த நிலையில் சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படம் சூப்பர் ஹிட் ஆனது. படத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது பாகங்களும் எதிர்பார்த்த அளவு மக்களிடையே வரவேற்பை பெற்றது. சமீபத்தில் சுந்தர்.சி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள் உலக அளவில் பேய் படம் என்றாலே ஹாரர் தான் இருக்கும். ஆனால் உங்கள் படத்தில் மட்டும் நடிகைகளை கிளாமராக காட்டுகிறீர்கள் ஒரு பேய் படத்தில் நடிகைகளை இப்படி காட்ட நினைத்தது எப்படி என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சுந்தர்.சி பேய் படம் என்றாலே பழைய கட்டிடம், இருட்டு மக்களை பயமுறுத்தும் முகம் தான் இடம்பெற்றிருக்கும். நான் ஏன் பிரமாண்ட செட்டில் படத்தை எடுக்கக் கூடாது என நினைத்தேன். பேய் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டுமா அழகாவும் இருக்கலாமே என்று நினைத்தேன். அதுதான் எனது பேய் படங்கள் அப்படி இருக்க காரணம் என்ன பதில் அளித்துள்ளார்.
ஒடிசா மாநில அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில், 'ஹம் தில் தே சுகே சனம்' என்ற புகழ்பெற்ற…
டெல்லியில் மருந்துக்கடைக்காரர் ஒருவரின் நேர்மையைப் பாராட்டி, போலந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது சமூக…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தும்பேரி கிராமத்தில், 16 வயது பள்ளி மாணவி மோவிதாவின் மர்ம மரணமும், அவரது…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவிற்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையில் இருந்த…
கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவின் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பாக விளங்கி வந்த 'மகாத்மா காந்தி தேசிய…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களால் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும்…