இன்னைக்கு எங்கிட்ட பணம் இல்லாம இருக்கலாம், ஆனா.. மேடையில் ரோஜாவின் கணவர் ஆர் கே செல்வமணி ஆதங்கம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஆர் கே செல்வமணி கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது தயாரிப்பாளர்களுக்குள் ஒற்றுமை கிடையாது, பெப்சி அமைப்பை அழித்து புதிய அமைப்பை உருவாக்க நினைக்கின்றனர், அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று பேசி இருந்தார். நேற்று 5 ஸ்டார் கிரியேஷன் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் கலைச்செல்வி தனுஷ் அவர்களின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து பெற்ற முன்பனத்திற்கு இன்று வரை கால் சூட் தரவில்லை என்று கூறி அறிக்கை வெளியிட்டு பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணிக்கு பல கேள்விகளை கேட்டிருந்தார்.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் தற்போது பேசியுள்ள ஆர் கே செல்வமணி, எனக்கு இப்போது 60 வயது கடந்து விட்டது. இந்த 60 ஆண்டுகளில் நான் மிகவும் வேதனையாக இருந்த நாள் நேற்று தான். என்னுடைய தாய் தந்தையாரை எதிர்த்து நிற்கும் போது எந்த அளவுக்கு வேதனைக்கு ஆளானேனோ அந்த அளவுக்கு நேற்றைய தினம் வேதனையுடன் இருந்தேன். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு என்னை போல் நன்மை செய்தவர்கள் யாருமே இருக்க முடியாது. இதுவரை பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் தற்போது பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் யாரும் அவ்வளவு நன்மைகளை செய்திருக்க மாட்டார்கள்.

சிரமமான சூழல்களுக்கு எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு யாரெல்லாம் எதிரியோ அவர்களை எதிர்ப்பதற்கு எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று நாங்கள் சொல்லி இருக்கிறோம். எந்த ஈகோவும் இல்லாமல் அவர்கள் அழைக்கும் போதெல்லாம் நாங்கள் சென்று இருக்கிறோம். பல நாட்கள் அவர்கள் இல்லாமல் கூட திரும்பி உள்ளோம். பல மணி நேரம் கூட காத்திருப்போம். ஆனால் அதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் கிடையாது. தமிழ் சினிமா சரியான திசையில் செல்ல வேண்டுமென்றால் தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றாக இருந்தால்தான் முடியும் என்பதை யோசித்து தான் நான் அதை செய்திருக்கிறேன். அவர்களின் புரிதல் இன்மைக்கு நான் எதுவும் பண்ண முடியாது.

மேடைக்கு அனைத்து தயாரிப்பாளர்களை அழைத்து வாருங்கள். அங்கு நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதனை திருத்திக் கொள்கிறேன். தமிழ் சினிமா சரியான பாதையில் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்வதற்கு கஷ்டப்பட்டு ஒரு விஷயத்தை கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் இன்று வரை அவர்கள் கையெழுத்து போடவில்லை. இந்த விஷயம் அவர்கள் நூறு வருடங்கள் போராடினாலும் பண்ண முடியாதது. எங்களால் முடிந்த அத்தனை விஷயங்களையும் அவர்கள் கேட்காமல் நான் செய்து கொடுத்துள்ளேன். நான் இன்றைக்கு பணம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் சுய ஒழுக்கத்தில் என்னை விட சிறந்தவன் யாருமில்லை. என்னுடைய சினிமா, குடும்பம் மற்றும் பதவி என அனைத்தையும் விட என்னுடைய சுயமரியாதை தான் எனக்கு பெரியது என்று ஆர் கே செல்வமணி பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

8 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

8 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

9 மணத்தியாலங்கள் ago