Categories: சினிமா

ஏ ஆர் ரஹ்மானை நான் மாமா என்று கூப்பிடுவது இல்லை… ஏன் தெரியுமா?- ஜி வி பிரகாஷ் பகிர்ந்த தகவல்!

Spread the love

ஜி வி பிரகாஷ் தன்னுடைய 17 ஆவது வயதிலேயே வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால் வெயில் படத்துக்கு முன்பாகவே ஏ ஆர் ரஹ்மான் இசையில் சில பாடல்களை ஜி வி பிரகாஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிக்கு புக்கு ரயிலே, குச்சி குச்சி ராக்கம்மா உள்ளிட்ட பாடல்களில் இடம்பெறும் சிறுவனின் குரல் அவருடையதுதான்.

வெயில் படத்தில் இடம்பெற்ற சில பாடல்களை எப்படி அவர் அவ்வளவு சின்ன வயதில் இசையமைத்திருப்பார் என ஆச்சர்யப்பட்டனர்.  அந்த படத்தில் இடம்பெற்ற ‘உருகுதே மருகுதே’, ‘வெயிலோடு உறவாடி’ போன்ற பாடல்கள் அந்த படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. இந்த படத்தின் வெற்றியாலும் பாடல்கள் பெற்ற கவனத்தாலும் ஒரே படத்தில் முன்னணி இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார். அதன் பின்னர் இப்போது வரை 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் நடிகராக 25 படங்களுக்கு மேல் நடிகராகவும் நடித்துள்ளார்.

இதற்கிடையில் அவர் சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதற்கு முக்கியக் காரணம் அவர் தன்னுடைய காதல் மனைவி சைந்தவியை விவாகரத்து செய்ததுதான். அவர் பிரபல நடிகை திவ்யபாரதியை காதலிப்பதால்தான் சைந்தவியை விவாகரத்து செய்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கிசுகிசுவை இருவருமே மறுத்துள்ளனர். ஜி வி பிரகாஷின் இந்த விவாகரத்து முடிவை திரும்பப் பெற வைக்க ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும்  அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜி வி பிரகாஷ், தனக்கும் தன்னுடைய மாமா ரஹ்மானுக்கும் இடையிலான உறவு குறித்துப் பேசியுள்ளார். அதில் “நான் சின்னவயதில் எல்லாம் அவரை மாமா என்றுதான் அழைத்து வந்தேன். ஆனால் இடையில் நான் அவரிடம் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன். அப்பொது அவரை எல்லோரும் சார் சார் என்று அழைப்பதைப் பார்த்து நானும் அப்படியே அழைக்கத் தொடங்கினேன். இப்போதும் சார் என்றுதான் அழைத்து வருகிறேன். மாமா என்று கூப்பிட முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

6 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

6 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

6 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

6 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

7 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

7 மணத்தியாலங்கள் ago