“கவுண்டர் தான் ஆளனும்”… “நம்ம ஜாதி ஆளுதான் ஆளப்போறாரு”.. மேடையிலேயே ஜாதியைத் தூக்கிய திண்டுக்கல் சீனிவாசன்… அதிர்ச்சியில் திமுக….!

Spread the love

திண்டுக்கல் சட்டசபை தொகுதியின் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், தேர்தல் பிரசாரத்தின் போது ஜாதியை குறிப்பிட்டுப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காப்பிலியப்பட்டியில் நடைபெற்ற பிரசாரத்தின் போது பேசிய அவர், அங்குள்ள மக்கள் ‘ஒக்கலிகர் கவுண்டர்கள்’ என்றும், அடுத்த முதலமைச்சராக வரப்போகும் எடப்பாடி பழனிசாமி ‘கொங்கு வேளாளர் கவுண்டர்’ என்றும் குறிப்பிட்டு, ஒரு கவுண்டர் தமிழகத்தை ஆளப்போவது மகிழ்ச்சியான செய்தி எனப் பேசியுள்ளார்.

தற்போது திண்டுக்கல் தொகுதியில் போட்டி மிகவும் கடுமையாக உள்ளது. அதிமுகவின் மூத்த தலைவரான திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து, திமுக சார்பில் தற்போதைய அமைச்சர் ஐ.பி. பெரியசாமியின் மகனும், பழனி தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஐ.பி. செந்தில்குமார் களமிறங்கியுள்ளார். இருவருமே தொகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்து வரும் நிலையில், சீனிவாசனின் இந்த ஜாதி ரீதியிலான பேச்சு சமூக வலைதளங்களில் வீடியோவாகப் பரவி விவாதங்களை கிளப்பியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, எந்தவொரு வேட்பாளரும் ஜாதி, மதம் அல்லது இன ரீதியாக வாக்குகளைக் கோருவது கடுமையான தேர்தல் விதிமீறலாகும். “ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு பழனிசாமி ஆட்சி செய்தார்” என்று ஒருபுறம் கூறிக்கொண்டே, மற்றொருபுறம் ஜாதி அடையாளத்தை முன்னிறுத்தி அவர் பேசியிருப்பது முரணாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஸ்டாலினின் ஆட்சியை மாற்ற இரட்டை இலைக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தாலும், ஜாதியைத் தொட்டுப் பேசியது அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜாதி உணர்வைத் தூண்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திண்டுக்கல் சீனிவாசன் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் புகார் அளித்துள்ளனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த சர்ச்சை பேச்சு திண்டுக்கல் தொகுதி தேர்தல் முடிவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

திமுக கூட்டணியில் இருந்து திடீர் விலகல்… முதலமைச்சர் விஜய்யுடன் கைக்கோர்த்த வைகோ.. அதிரடி திருப்பம்..!!

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

10 minutes ago

ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய CM விஜய்.. அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சரின் நண்பர்கள்..? தலைமைச் செயலகத்தில் அறை ஒதுக்கப்பட்ட பின்னணி என்ன..? வில்சன் கேள்வி..!!

தமிழக முதலமைச்சர் விஜய், தனது பதவியேற்பின் போது எடுத்துக்கொண்ட ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன்…

14 minutes ago

ஒரு ஸ்ட்ராவால் வந்த வினை..! கல்லூரி மாணவனுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அபாயம்.. சிங்கப்பூர் போலீஸ் அதிரடி..!!

சிங்கப்பூரில் கல்வி பயின்று வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வணிகவியல் மாணவரான டிடியர் காஸ்பார்ட் ஓவன் மாக்ஸிமிலியன் என்பவர், அங்குள்ள…

28 minutes ago

கோயில் வளாகத்திற்குள்ளேயே பூசாரி தூக்கிட்டுத் தற்கொலை… நடந்தது என்ன..? உறைந்துபோன கிராம மக்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் உள்ள ஒரு கோயிலின் பூசாரியான பிட்டு என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்…

36 minutes ago

ATM கார்டை பயன்படுத்தி மாத்திரையை நொறுக்கி டெமோ காட்டுங்க.. அமைச்சர் சரத்குமாருக்கு கீதாஜீவன் சவால்…!!

தமிழக அமைச்சர் டி. சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மொபைல் திரையில் மாத்திரையை நொறுக்கியதாகக் கூறிய விளக்கத்தை, திமுக முன்னாள்…

41 minutes ago

“பெத்தவங்களை கஷ்டப்படுத்துறத விட கொல்லுறதே மேல்” இதுதான் ஈஸியான வேலை.. புனே கொலை வழக்கில் மணப்பெண்ணின் நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்…!!

புனே லோஹாகட் கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபரான கேதன் அகர்வால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட…

41 minutes ago