“கவுண்டர் தான் ஆளனும்”… “நம்ம ஜாதி ஆளுதான் ஆளப்போறாரு”.. மேடையிலேயே ஜாதியைத் தூக்கிய திண்டுக்கல் சீனிவாசன்… அதிர்ச்சியில் திமுக….!

Spread the love

திண்டுக்கல் சட்டசபை தொகுதியின் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், தேர்தல் பிரசாரத்தின் போது ஜாதியை குறிப்பிட்டுப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காப்பிலியப்பட்டியில் நடைபெற்ற பிரசாரத்தின் போது பேசிய அவர், அங்குள்ள மக்கள் ‘ஒக்கலிகர் கவுண்டர்கள்’ என்றும், அடுத்த முதலமைச்சராக வரப்போகும் எடப்பாடி பழனிசாமி ‘கொங்கு வேளாளர் கவுண்டர்’ என்றும் குறிப்பிட்டு, ஒரு கவுண்டர் தமிழகத்தை ஆளப்போவது மகிழ்ச்சியான செய்தி எனப் பேசியுள்ளார்.

தற்போது திண்டுக்கல் தொகுதியில் போட்டி மிகவும் கடுமையாக உள்ளது. அதிமுகவின் மூத்த தலைவரான திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து, திமுக சார்பில் தற்போதைய அமைச்சர் ஐ.பி. பெரியசாமியின் மகனும், பழனி தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஐ.பி. செந்தில்குமார் களமிறங்கியுள்ளார். இருவருமே தொகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்து வரும் நிலையில், சீனிவாசனின் இந்த ஜாதி ரீதியிலான பேச்சு சமூக வலைதளங்களில் வீடியோவாகப் பரவி விவாதங்களை கிளப்பியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, எந்தவொரு வேட்பாளரும் ஜாதி, மதம் அல்லது இன ரீதியாக வாக்குகளைக் கோருவது கடுமையான தேர்தல் விதிமீறலாகும். “ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு பழனிசாமி ஆட்சி செய்தார்” என்று ஒருபுறம் கூறிக்கொண்டே, மற்றொருபுறம் ஜாதி அடையாளத்தை முன்னிறுத்தி அவர் பேசியிருப்பது முரணாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஸ்டாலினின் ஆட்சியை மாற்ற இரட்டை இலைக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தாலும், ஜாதியைத் தொட்டுப் பேசியது அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜாதி உணர்வைத் தூண்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திண்டுக்கல் சீனிவாசன் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் புகார் அளித்துள்ளனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த சர்ச்சை பேச்சு திண்டுக்கல் தொகுதி தேர்தல் முடிவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

49 minutes ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

1 மணத்தியாலம் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

2 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

2 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

2 மணத்தியாலங்கள் ago