அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள அதே வேளையில், ஈரானுக்கு ராணுவ ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் மீது 50 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அதிரடி முடிவையும் அமலாக்கம் செய்துள்ளார். ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் ஈரானுக்கு முக்கிய ஆயுத விநியோகஸ்தர்களாக விளங்கும் நிலையில், சீனாவின் அடுத்தக்கட்ட நகர்வு சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அடுத்த சில வாரங்களுக்குள் சீனா ஈரானுக்கு புதிய வான்பாதுகாப்பு அமைப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ள தகவலை சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான 6 வார கால போரை முடிவுக்குக் கொண்டு வர, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா ஹோட்டலில் இரு நாட்டு அதிகாரிகளும் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்ற ஈரானின் முக்கிய கோரிக்கையை அமெரிக்கா பரிசீலித்து வரும் சூழலில், இந்த ஆயுத விநியோகச் செய்தி பேச்சுவார்த்தையில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. அமைதி முயற்சிகள் ஒருபுறம் நடக்க, மறுபுறம் உளவுத்துறையின் இந்தத் தகவல் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
சீனா நேரடியாக ஆயுதங்களை அனுப்பாமல், ‘MANPAD’ எனப்படும் தோளில் சுமந்து சென்று விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் ஏவுகணை அமைப்புகளை மூன்றாம் நாடுகள் வழியாக ரகசியமாக ஈரானுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த ஏவுகணைகள் ஹெலிகாப்டர்கள் மற்றும் தாழ்வாகப் பறக்கும் விமானங்களுக்கு எதிராகச் செயல்படும் மிகவும் சக்திவாய்ந்தவை. ஏற்றுமதி செய்யப்படும் இடத்தை மறைப்பதன் மூலம் சர்வதேசத் தடைகளில் இருந்து தப்பிக்க சீனா முயல்வதாக அமெரிக்க உளவுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையோ அல்லது வாஷிங்டனில் உள்ள சீன தூதரகமோ இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை. போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கை அமெரிக்கத் தரப்பில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் கவனம் முழுவதும் இப்போது இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை மற்றும் சீனாவின் ரகசிய ஆயுத நகர்வுகள் மீது திரும்பியுள்ளது.
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரும்…
தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…
பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…