அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள அதே வேளையில், ஈரானுக்கு ராணுவ ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் மீது 50 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அதிரடி முடிவையும் அமலாக்கம் செய்துள்ளார். ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் ஈரானுக்கு முக்கிய ஆயுத விநியோகஸ்தர்களாக விளங்கும் நிலையில், சீனாவின் அடுத்தக்கட்ட நகர்வு சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அடுத்த சில வாரங்களுக்குள் சீனா ஈரானுக்கு புதிய வான்பாதுகாப்பு அமைப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ள தகவலை சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான 6 வார கால போரை முடிவுக்குக் கொண்டு வர, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா ஹோட்டலில் இரு நாட்டு அதிகாரிகளும் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்ற ஈரானின் முக்கிய கோரிக்கையை அமெரிக்கா பரிசீலித்து வரும் சூழலில், இந்த ஆயுத விநியோகச் செய்தி பேச்சுவார்த்தையில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. அமைதி முயற்சிகள் ஒருபுறம் நடக்க, மறுபுறம் உளவுத்துறையின் இந்தத் தகவல் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
சீனா நேரடியாக ஆயுதங்களை அனுப்பாமல், ‘MANPAD’ எனப்படும் தோளில் சுமந்து சென்று விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் ஏவுகணை அமைப்புகளை மூன்றாம் நாடுகள் வழியாக ரகசியமாக ஈரானுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த ஏவுகணைகள் ஹெலிகாப்டர்கள் மற்றும் தாழ்வாகப் பறக்கும் விமானங்களுக்கு எதிராகச் செயல்படும் மிகவும் சக்திவாய்ந்தவை. ஏற்றுமதி செய்யப்படும் இடத்தை மறைப்பதன் மூலம் சர்வதேசத் தடைகளில் இருந்து தப்பிக்க சீனா முயல்வதாக அமெரிக்க உளவுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையோ அல்லது வாஷிங்டனில் உள்ள சீன தூதரகமோ இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை. போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கை அமெரிக்கத் தரப்பில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் கவனம் முழுவதும் இப்போது இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை மற்றும் சீனாவின் ரகசிய ஆயுத நகர்வுகள் மீது திரும்பியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…
பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…