செங்கல்பட்டு அடுத்த பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி இந்துஜா (28). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், வெங்கடேசனின் தாய் பெருந்தேவியுடன் (61) ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கணவன்-மனைவி இடையேயான சண்டைகளுக்கும் மாமியாரே காரணம் எனக் கூறி இந்துஜா ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
சம்பவத்தன்று பெருந்தேவி கழிவறையில் எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இந்துஜா, அவரது கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் மாமியார் தவறி விழுந்து மூச்சுத்திணறி மயங்கிவிட்டதாக நாடகமாடிச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். உடற்கூறாய்வு அறிக்கையில் பெருந்தேவியின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அம்பலமானது. காவல்துறையினரின் தீவிர விசாரணையில், “அவர் இறந்தால்தான் நாங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்பதால் கொலை செய்தேன்” என இந்துஜா பகிரங்கமாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவரைக் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…
மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சூர் மாவட்டம் ம மதார்புரா பகுதியைச் சேர்ந்த 32 வயதான இஸ்மாயில் என்பவரை, அவரது வீட்டை…
டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள சிங்கல்பூர் கிராமத்தில், அனில் குப்தா என்பவர் தனது சொந்த வளர்ப்பு நாயை தினமும்…