செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை கடுமையாக விமரிசித்துப் பேசினார். அவர் பேசுகையில், “தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு லஞ்சம் கேட்டு வாங்கும் சூழல் உருவாகியுள்ளது. மின்வெட்டு இல்லை என்று சொல்லிக்கொண்டே வெளிச் சந்தையில் 2000 மெகாவாட் மின்சாரத்தை வாங்க அரசு முற்படுவது அவர்களின் அனுபவமின்மையையே காட்டுகிறது. மேலும், ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் ரூ.40,000 கோடி கடன் வாங்கியுள்ளனர். இந்தச் சூழலில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கடற்கரை மற்றும் பள்ளிப் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல” என்று சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், “முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் ஒரு இன்பச் சுற்றுலா மட்டுமே. இங்கேயே கிளைகள் உள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய லண்டன் வரை செல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும், அதிமுக எம்.எல்.ஏ-க்களைக் குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்கி மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத்தேர்தலைத் திணித்துள்ளனர். மக்களின் தீர்ப்பை மதிக்காத இந்த தவெக அரசுக்கு வரும் இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என எடப்பாடி பழனிசாமி கொந்தளித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சிவல்சருகு கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி முருகன் (38) கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி…
சிங்கப்பூரில் உள்ள பிரபல மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் (45), 2022 ஆம் ஆண்டு தனது 14 வயது…
ஜெர்மனியில் 14 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 55 வயதான திருநங்கை காவல்துறை அதிகாரி ஒருவர்…