தமிழக-கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில், காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 1.18 கோடி ஹவாலா பணத்தை கேரள போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். சேலத்தில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, இருக்கைக்கு அடியில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணம் கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக காரில் பயணம் செய்த மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த சவான் ரூபேஷ் மற்றும் அவரது மனைவி அர்ச்சனா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் கடந்த சில காலமாக சேலத்தில் தங்கி வசித்து வந்த நிலையில், அங்கிருந்து கொச்சிக்கு இந்தப் பணத்தை முறைகேடாகக் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அது ஹவாலா பணம் என்பதை போலீசார் உறுதி செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.18 கோடி ரொக்கம் மற்றும் கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேல் விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் எல்லையோரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…
ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…