“முதல்வர் விஜய்க்கு தூக்கமே வரல”…. எங்களை பார்க்கும் போதெல்லாம் சொல்வார்…. தூய்மைப் பணியாளர்களிடம் கலங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா….!

Spread the love

தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும், மக்கள் நலன் சார்ந்த இந்த அரசில் அவர்களின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டடக் கிழக்குப் பகுதி வாயிலில், பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தூய்மைப் பணியாளர்கள் கடந்த 15 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் கோரிக்கை மனுக்களை முதல்வர் விஜய்யிடம் நேரடியாக வழங்க நேரம் ஒதுக்க வேண்டும் என்பதும் அவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது.

இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் இன்று நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் நடத்தி வரும் பணியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தூய்மைப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராடுவதைப் பார்த்து முதல்வர் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், “நீங்கள் இங்கு போராட்டத்தில் இருக்கும்போது எங்கள் முதல்வருக்குத் தூக்கமே வருவதில்லை; உங்களைப் பார்க்கும் போதெல்லாம் உங்களுக்கு நன்மையளிக்கும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டும் என்றே தொடர்ந்து கூறி வருகிறார்” எனத் உருக்கமாகப் பதிவிட்டார்.

கடந்த ஆட்சிக் காலங்களில் போராட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு, இரவோடு இரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அப்புறப்படுத்தப்பட்ட நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய ஆட்சியில் ஜனநாயக உரிமைக்கு முழு மதிப்பு அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள் மீது எவ்வித அதிகாரப் பிரயோகமும் செய்யக் கூடாது என்றும், யாரையும் மிரட்டவோ அல்லது அவர்கள் மீது கை வைக்கவோ கூடாது என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். இது மக்களின் ஆட்சி என்றும், அரசின் கதவுகள் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்காக எப்போதுமே திறந்திருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முந்தைய ஆட்சியில் கடன்கள் வாங்கி ஊழல் செய்த நிலைக்கு மாறாக, தற்போதைய அரசு கடன் வாங்கியாவது மக்களுக்குச் சிறப்பான சேவைகளை வழங்கி வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார். அவுட்சோர்சிங் முறைகளில் முன்பு நடந்த முறைகேடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசுக்குச் சற்று அவகாசம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். பணியாளர்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டுத் தங்களது குடும்பத்தினருடன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதே அரசின் முதன்மையான விருப்பம் என்றும், அவர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Nanthini

Recent Posts

“கை, காலில் தொற்று…?” தளராமல் கைகளால் ஆற்றை சுத்தம் செய்யும் வாலிபர்… நகராட்சியை நோக்கிக் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்…!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு தபாஹி என்ற 20 வயது கல்லூரி மாணவர், தனது பகுதியில் உள்ள மாசடைந்த ஆஜனார்…

3 minutes ago

“நம்ம 2 பேரும் ஃப்ரண்ட்ஸ்”…. மாணவியிடம் HM செய்த காரியம்…. வெளிவந்த அதிர்ச்சி உண்மை… பதறும் தமிழகம்….!

திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரு தலைமை ஆசிரியர்கள் போக்சோசட்டத்தின்…

27 minutes ago

விஜய் தான் அடுத்த பிரதமரா?…. “என்னை சிக்கல்ல மாட்டி விடாதீங்க”…. செய்தியாளர்கள் கேட்ட கேள்வியால் அலறிய அமைச்சர் செங்கோட்டையன்….!

தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய், இந்தியாவின் அடுத்த பிரதமர் என்ற பேச்சுக்கள் அக்கட்சியினரிடையே தீவிரமடைந்து வந்தன.…

32 minutes ago

“மதுரையை ஆளப்போவது யாரு?”…. தவெக vs காங்கிரஸ் மோதல் – மாணிக்கம் தாகூரின் மாஸ் மூவ்… ஷாக்கில் நிர்மல்குமார்….!

தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத் தலைமை…

43 minutes ago

“சுற்றிலும் பிணங்கள்… 9 மணி நேர போராட்டம்”… எமனுக்கே சவால் விட்ட 97 வயது மூதாட்டி… நேபாள பேரழிவில் நடந்த அந்த ஒரு அதிசயம்….!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, நாடு முழுவதும் பெரும் சோகம் சூழ்ந்துள்ள நிலையில், ஒரு நம்பிக்கை…

51 minutes ago

14 லிட்டர் வினிகர்… பிரியாணி அண்டாவில் உடல் பாகங்கள்…. கூடுவாஞ்சேரி வழக்கில் வெளியான அடுத்தடுத்த கொடூரங்கள்…. ஒரே ஒரு ‘போன் கால்’ வைத்து தூக்கிய தனிப்படை….!

சென்னை கூடுவாஞ்சேரியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத்துன் நிஷா என்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது காதலன்…

56 minutes ago