திமுகவிற்கு ‘திடீர்’ அதிர்ச்சி… விலகிய தோப்பு வெங்கடாசலம்… தவெக இல்ல.. மீண்டும் அதிமுகவா?…. கொங்கு மண்டலத்தின் மாஸ் ட்விஸ்ட்….!

Spread the love

திமுகவில் இருந்து சமீபத்தில் விலகிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தாய் கழகமான அதிமுகவிலேயே இணைய தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் பலமான தூணாக விளங்கிய இவர், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும், பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சுயேச்சையாக களமிறங்கி, பின்னர் திமுகவில் இணைந்தார். திமுக சார்பில் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்ட போதிலும், அங்குள்ள உட்கட்சி பூசல்கள் காரணமாக அமைதி காத்து வந்த அவர், தற்போது திமுகவில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.

ஈரோடு மாவட்ட திமுகவில் அமைச்சர் முத்துசாமிக்கும் தோப்பு வெங்கடாசலத்திற்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. நடந்து முடிந்த தேர்தலில் தனது தோல்விக்கு உட்கட்சி பூசலே காரணம் என அவர் கருதிய நிலையில், திமுகவின் முக்கிய நிகழ்வுகளைப் புறக்கணித்து வந்தார். இதனையடுத்தே கட்சியின் தலைமைக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி அவரது பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இந்த அதிருப்தியின் உச்சமாகவே அவர் திமுகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, அவர் தவெகவில் இணையக்கூடும் என்று பரவலாகப் பேசப்பட்டாலும், தற்போதைய அரசியல் சூழல் அவரை மீண்டும் அதிமுகவை நோக்கி நகரச் செய்துள்ளது.

தோப்பு வெங்கடாசலம் தவெகவில் இணைவதைத் தவிர்த்து அதிமுகவை மீண்டும் நாட முக்கிய காரணம் பெருந்துறை தொகுதி இடைத்தேர்தல்தான் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெகவில் இணைந்தால் பெருந்துறை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு தனக்குக் கிடைக்காது என்றும், அங்கு தவெக சார்பில் வேறு நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என்றும் அவர் கணித்துள்ளார். எனவே, பெருந்துறையில் மீண்டும் தனது செல்வாக்கை நிருபிக்கும் பொருட்டு, வரும் இடைத்தேர்தலில் அங்கு போட்டியிட வாய்ப்பு தருமாறு அதிமுக தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “முதலில் கட்சியில் வாருங்கள், வேட்பாளர் வாய்ப்பு குறித்து பின்னர் முடிவு செய்யலாம்” என்று நிதானமான பதிலை அளித்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், பெருந்துறை மற்றும் ஈரோடு மாவட்டப் பகுதிகளில் தனது பழைய செல்வாக்கை மீட்டெடுக்க தோப்பு வெங்கடாசலத்திற்கு அதிமுக கதவுகள் திறக்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரும் நாட்களில் அவர் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைவார் என கொங்கு அரசியல் வட்டாரங்கள் உற்றுநோக்குகின்றன.

Nanthini

Recent Posts

“நம்ம 2 பேரும் ஃப்ரண்ட்ஸ்”…. மாணவியிடம் HM செய்த காரியம்…. வெளிவந்த அதிர்ச்சி உண்மை… பதறும் தமிழகம்….!

திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரு தலைமை ஆசிரியர்கள் போக்சோசட்டத்தின்…

1 minute ago

விஜய் தான் அடுத்த பிரதமரா?…. “என்னை சிக்கல்ல மாட்டி விடாதீங்க”…. செய்தியாளர்கள் கேட்ட கேள்வியால் அலறிய அமைச்சர் செங்கோட்டையன்….!

தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய், இந்தியாவின் அடுத்த பிரதமர் என்ற பேச்சுக்கள் அக்கட்சியினரிடையே தீவிரமடைந்து வந்தன.…

6 minutes ago

“மதுரையை ஆளப்போவது யாரு?”…. தவெக vs காங்கிரஸ் மோதல் – மாணிக்கம் தாகூரின் மாஸ் மூவ்… ஷாக்கில் நிர்மல்குமார்….!

தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத் தலைமை…

17 minutes ago

“சுற்றிலும் பிணங்கள்… 9 மணி நேர போராட்டம்”… எமனுக்கே சவால் விட்ட 97 வயது மூதாட்டி… நேபாள பேரழிவில் நடந்த அந்த ஒரு அதிசயம்….!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, நாடு முழுவதும் பெரும் சோகம் சூழ்ந்துள்ள நிலையில், ஒரு நம்பிக்கை…

25 minutes ago

14 லிட்டர் வினிகர்… பிரியாணி அண்டாவில் உடல் பாகங்கள்…. கூடுவாஞ்சேரி வழக்கில் வெளியான அடுத்தடுத்த கொடூரங்கள்…. ஒரே ஒரு ‘போன் கால்’ வைத்து தூக்கிய தனிப்படை….!

சென்னை கூடுவாஞ்சேரியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத்துன் நிஷா என்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது காதலன்…

30 minutes ago

ஐகோர்ட் ஆப்பு வச்சும் அடங்காத ராஜினாமா விவகாரம்…. சபாநாயகர் கையில் இசக்கி சுப்பையாவின் ‘U-Turn’ கடிதம்….!

முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவி ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக அளித்த கடிதம் தற்போது ஆய்வு நிலையில்…

37 minutes ago