வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சின்மயி தொடர்ந்து இணையவழித் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகிறார். சமீபத்தில், அவரது கணவர் ராகுல் ரவீந்திரன் ‘தாலி’ குறித்த கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் எதிரான கொலை மிரட்டல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் பாடகி சின்மயி தனது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தைப் பதிவிட்டு வெளியிட்ட வீடியோவில், இணையவழித் துன்புறுத்தல் மற்றும் AI ஆபாசப் படங்களின் ஆபத்துகள் குறித்துக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அதில், “இன்று ஒரு பக்கத்தில் இருந்து எனக்கு மார்பிங் செய்யப்பட்ட படம் கிடைத்தது, அதைக் காவல்துறைக்கு டேக் செய்தேன். சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பது பிரச்சனையே அல்ல. நான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளேன். கடந்த சில வாரங்களாக எனது குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல்கள் வருகின்றன. பெண்கள் இதுபோன்ற மிரட்டல்களுக்குப் பயப்படவோ அல்லது வெட்கப்படவோ கூடாது என்றும், இது பெண்களின் தவறு அல்ல, மாறாகப் பொதுவெளியில் இருந்து பெண்களை வெளியேற்ற ஆண்கள் மேற்கொள்ளும் முயற்சி. பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு அடங்கிப் போக வேண்டும் என்ற எண்ணம் இந்த ஆணாதிக்க சமூகத்தில் பலருக்கும் உள்ளது. அப்படி அடங்கிப் போகாத பெண்கள் இறந்து போக வேண்டும் என நினைக்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தால், வெட்கப்படாமல் உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.
கடல் என்பது இன்னும் முழுமையாகக் கண்டறியப்படாத பல மர்மங்களைக் கொண்டது. விண்வெளியைப் பற்றி அதிகம் அறிந்த மனிதனால், கடலின் 5…
யுகாண்டாவில் உள்ள நைல் நதியின் மிக ஆபத்தான மற்றும் அதிவேகமாகப் பாயும் நீரோட்டத்தில், நபர் ஒருவர் எவ்வித அச்சமுமின்றி மிதந்து…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், பெண் ஒருவர் வாடிய வெள்ளரிக்காய்களைப் பசுமையாகக் காட்டுவதற்காக, அவற்றை செயற்கை…
ஈரோடு மாவட்டம் பர்கூரில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில்…
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல், ஒரு விறுவிறுப்பான அரசியல் த்ரில்லர் திரைப்படத்தைப் போலத் திருப்பங்களுக்குப்…
ஐபிஎல் 2026 தொடரில் ஆர்சிபி (RCB) அணிக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா…