Connect with us

CINEMA

வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ‘சந்திரலேகா’ சீரியல் நடிகை… அடடே இவர்தானா அது!….

‘சந்திரலேகா’ சீரியல் நடிகையான ஸ்வேதா தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்பொழுது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

சன் டிவியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது.அதில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிந்த ஒரு சீரியல் தான் ‘சந்திரலேகா’. இந்த சீரியலில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் தான் நடிகை ஸ்வேதா பண்டேகர். இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

   

இவர் ஆழ்வார், இதயம், திரையரங்கம், வள்ளுவன் வாசுகி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு ஒதுங்கிய இவர் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘வள்ளி திருமணம்’ என்ற சீரியல் பூமிகா என்று கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார்.

இவர் எப்பொழுதும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்நிலையில் நடிகை ஸ்வேதா தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது இவர் தனது வருங்கால கனவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் அதில் அவர் ‘எனது இதயம் வெகு நாளாக காணாமல் போய் விட்டது. நன்றி கடவுளே. இறுதியாக அதை நான் கண்டுபிடித்து விட்டேன். இவர் தான் எனது காதல்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

வைரலாகும் பதிவு இதோ….

 

View this post on Instagram

 

A post shared by shwetha bandekar (@shwetha_bandekar)

Continue Reading

More in CINEMA

To Top