Categories: சினிமா

சென்சார் அதிகாரிகள் சொல்லி க்ளைமேக்சை மாற்றி ஹிட்டடித்த சூப்பர் ஹிட் படம்… தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன் கூட்டத்தில் ஒருவனாக இருந்து ‘எஸ் பாஸ்’ சொல்லியே நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் அவரை கதாநாயகனாக்கின.

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். ஹீரோவாக நடித்த போது தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ், இப்போது பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.  மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்போதும் தன் மகனை விட பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சத்யராஜ்.

2005 வரை ஹீரோவாக நடித்து வந்த சத்யராஜுக்கு அப்போது மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அதனால் அவர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் முடிவை எடுத்தார். அந்த முடிவு அவரை இன்று வரை பிஸியான நடிகராக வைத்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் மட்டும் இல்லாமல் தற்போது இந்தி படங்கள் வரை நடித்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சத்யராஜின் ஆரம்பகால சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ஜல்லி கட்டு. அந்த படத்தில் சிவாஜியோடு இணைந்து அவர் நடித்திருப்பார். ஜல்லிக்கட்டு படத்தின் தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் “இந்த படத்தில் நீதிபதியே ஒரு குற்றவாளியைத் தப்பிக்கவிட்டு குற்றவாளிகளைக் கொலை செய்ய சொல்வார். படத்தின் இறுதியில் இருவரும் சட்டத்தில் மாட்டிக் கொள்ளாதது மாதிரி க்ளைமேக்ஸ் எடுத்திருந்தோம்.

அதைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் “எப்படி ஒரு நீதிபதியே இப்படி செய்துவிட்டு சுதந்திரமாக இருக்கலாம்” என்ற கேள்வியை எழுப்பினார்கள். அதன் பின்னர்தான் நாங்கள் அவர் சட்டத்தை மதித்து கைதாவது போல மாற்றினோம். இந்த படத்தைப் பார்த்துவிட்டு எம் ஜி ஆர் எங்களைப் பாராட்டினார்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

அய்யய்யோ… நாய் குறுக்கே வருது… காப்பாற்ற முயன்ற அதிவேகக் கார் மின்கம்பத்தில்… மோதி பயங்கர விபத்து… 4 பேர் படுகாயம்… திக் திக் நிமிடங்கள்…!

உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷெர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் நாயைக் காப்பாற்ற முயன்றபோது அதிவேகமாக வந்த கார் மின் கம்பத்தின் மீது…

6 minutes ago

“பிலிங்கிட் ஆர்டர் செய்த முட்டையில் நெளிந்த புழுக்கள்…” மங்களூரு வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் ஆன்லைன் டெலிவரி செயலியான 'பிலிங்கிட்' மூலம் வாடிக்கையாளர் ஒருவர் முட்டை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி…

22 minutes ago

ஒரே ஒரு ஐஏஎஸ் அதிகாரி…. அலறி அடித்த வியாபாரிகள்…! மும்பை ஸ்ட்ரீட் புட் உணவகங்களில் நடந்த அதிசயம்…!

மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கையால், மும்பை வீதியோர உணவகங்களில் பெரும் மாற்றம்…

26 minutes ago

அடச்சீ… காதலனுடன் சுற்ற சொந்த மாமா வீட்டிலேயே… 5 லட்சம் நகை கொள்ளை… உல்லாச விடுதியில் ஜாலியாக… இருந்த காதலி அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!

தன் காதலனுடன் ரெஸ்டாரண்ட், ஹோட்டல் மற்றும் மால் போன்ற இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்க்கக் கையில் பணமில்லாமல் தவித்த இளம்பெண் ஒருவர்,…

27 minutes ago

அடப்பாவி… காதலிக்கு பிறந்தநாள் கிஃப்ட் ஐபோனா?… இல்ல ஜெயிலா?… 12 கிலோ கஞ்சாவுடன் பைக்கில் பறந்த… இளம் ஜோடிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

இளம் ஜோடியினர் ஒடிசாவிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெத்தபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த…

38 minutes ago