“என் பொண்டாட்டியைக் கண்டுபிடிச்சுத் தாங்க” – கதறிய கணவன்.. தங்கை என்றும் பாராமல்… வீடியோவால் அம்பலமான உடன்பிறந்த அண்ணனின் கொடூரம்… !!

Spread the love

பீகார் மாநிலம் முசாபர்பூரில், காணாமல் போன தனது மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு கணவர் ஒருவர் சமூக ஊடகங்களில் கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ பதிவு, ஒரு கொடூரமான கௌரவக் கொலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. காதலித்துத் திருமணம் செய்து கொண்ட தனது மனைவி சுஜாதாவைக் காணவில்லை என்று கௌரி சங்கர் என்பவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறை தீவிர விசாரணை நடத்தத் தொடங்கியது.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சுஜாதாவின் சொந்த சகோதரனான அபிஷேக் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரே இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணம் என்பது தெரியவந்தது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த கௌரி சங்கரை சுஜாதா காதலித்து, வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டதால் அவரது குடும்பத்தினர் கடுமையான ஆத்திரத்தில் இருந்துள்ளனர். நீதிமன்றத்தில் சுஜாதா தனது கணவனுடன் வாழ விரும்புவதாகக் கூறிய போதிலும், ஹோலி பண்டிகையைக் காரணம் காட்டி அவரது தாய் சுஜாதாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் திட்டமிட்டபடி, சுஜாதாவின் சகோதரர் அபிஷேக் குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சுஜாதாவின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மேலும், கொலையை மறைப்பதற்காக அவரது உடலை ரகசியமாகத் தகனம் செய்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தற்பொழுது குற்றத்தை ஒப்புக்கொண்ட சகோதரர் அபிஷேக் குமாரை முசாபர்பூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“அங்கேயே தங்க வச்சது தான் தப்பா போச்சு”… பெரியபாளையம் இறால் ஆலையில் நடந்தது என்ன?… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்து, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…

7 minutes ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பழிதீர்க்கப் போட்ட பயங்கர ஸ்கெட்ச்… நடுவழியில் தூக்கிய தனிப்படை… அரக்கோணத்தில் சிக்கிய ‘ஒற்றைக்கண்’ ரவுடி…!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கே.பி நகர் பகுதியில் வசித்து வரும் பிரபல ‘ஏ ப்ளஸ்’ பிரிவு ரவுடியான ஜெயபால் (என்ற)…

12 minutes ago

“இதனால் ஒன்றும் ஆகாது”… திருப்பூர் பள்ளி மாணவியிடம் கைவரிசை காட்டிய ஊழியர்… இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவிக்கு…

22 minutes ago

“60 வயதில் வக்கிர புத்தி.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்”… அலறல் சத்தம் கேட்டு கதவைத் திறந்த அக்கம் பக்கத்தினர்.. உள்ளே கண்ட ரத்தக் கறை காட்சி…!

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இரு முதியவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம்…

26 minutes ago

“விஜய் கட்சியில் வெடித்த அடுத்த புயல்”…. அலறும் புஸ்ஸி ஆனந்த்… பதறியடித்து ஓடும் சிட்டிங் அமைச்சர்கள்…. கதறும் அதிமுக மாஜி புள்ளிகள்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது சீனியர் - ஜூனியர் மோதல்…

31 minutes ago

“23% கமிஷன்… விரட்டியடிக்கப்பட்ட 25 நிறுவனங்கள்”…. டி.ஆர்.பி.ராஜாவை வாயடைக்க வைத்த ‘ஜீரோ கரப்ஷன்’ மாடல்…. அதிரடி காட்டும் அமைச்சர் கீர்த்தனா…!

அரசு விழாக்களிலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் தமிழக அமைச்சர் கீர்த்தனா, கடந்த திமுக ஆட்சியை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசி…

38 minutes ago