தமிழக சட்டப்பேரவையில் மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ் பேசும்போது, சபாநாயகர் மற்றும் இதர உறுப்பினர்கள் அடுத்தடுத்து குறுக்கிட்டதால் அவரால் தொடர்ந்து பேச முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் படாதபாடு பட்ட அவர், இறுதியாகப் பேச வாய்ப்பு கிடைத்தபோது, “7-வது முறையாக எழுந்திருக்கிறேன்… இப்பயாச்சும் என்ன வாழ்த்து சொல்ல விடுங்க…” என்று வேதனையும் நகைச்சுவையும் கலந்து குறிப்பிட்டார். முதலமைச்சருக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக அவர் அரும்பாடுபட்ட இந்த நெகிழ்ச்சியான தருணத்தால் ஒட்டுமொத்த அவையிலும் சட்டென சிரிப்பலை ஏற்பட்டது.
முதலமைச்சருக்கு 7-வது முறையாகப் பிறந்தநாள் வாழ்த்து கூற முற்பட்ட எம்.எல்.ஏ காமராஜின் இந்த சுவாரசியமான பேச்சைக் கேட்டதும், முதலமைச்சர் விஜய் முகத்தில் புன்னகை அரும்பியது. சபை விவாதங்களுக்கு இடையே சபாநாயகரின் குறுக்கீடுகளால் தவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர், எப்படியாவது தனது வாழ்த்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக முயன்று வெற்றி பெற்ற இந்த நிகழ்வு, சட்டப்பேரவையில் ஒரு கலகலப்பான மற்றும் நெகிழ்ச்சியான சூழலை உருவாக்கியது.
பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்து, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கே.பி நகர் பகுதியில் வசித்து வரும் பிரபல ‘ஏ ப்ளஸ்’ பிரிவு ரவுடியான ஜெயபால் (என்ற)…
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவிக்கு…
மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இரு முதியவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம்…
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது சீனியர் - ஜூனியர் மோதல்…
அரசு விழாக்களிலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் தமிழக அமைச்சர் கீர்த்தனா, கடந்த திமுக ஆட்சியை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசி…