குருகிராமில் உள்ள செக்டார் 69 பகுதியில், தன்னுயுடன் ஒரே அறையில் வசித்து வந்த காதலியை (Live-in Partner), அவரது காதலன் மிருகத்தனமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் திரிபுராவைச் சேர்ந்தவர் மற்றும் குருகிராமில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பயோடெக் பயின்று வரும் மாணவி ஆவார். இவருக்கும் டெல்லியைச் சேர்ந்த சிவம் (19) என்பவருக்கும் கடந்த 2025 செப்டம்பரில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இரு வீட்டாரும் இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், சிவம் தனது காதலி மீது அதிக சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், சிவம் அந்தப் பெண்ணை ஒரு மிருகத்தைப் போல கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவி, குருகிராம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நிலைமை மோசமானதால் டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், குருகிராம் பாட்ஷாபூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 19 வயதான சிவத்தைக் கைது செய்துள்ளனர். ஒரு படித்த மாணவிக்குத் தனது வாழ்க்கைத் துணையால் நேர்ந்த இந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தை ஆளப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல், முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் களத்தில் பெரும்…
2007ஆம் ஆண்டு அரசு கடன் பத்திர ஒழுங்குமுறை விதிகளின்படி, அரசு கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கு அவற்றின் முதிர்வுத் தொகை மற்றும்…
மும்பை மகாலட்சுமி பகுதியில் உள்ள டெலிகாலர் நிறுவனத்தில் பணிபுரிந்த அர்ஷத் சித்திக்கி (25) என்பவர், தனது முன்னாள் பெண் சக…
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில், 12 வயது சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் அஸ்வின் ராஜ்…
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…