சென்னையில் நடந்த ஒரு சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது. சென்னை கொடுங்கையூர் யூனியன் கார்ப்பரேட் காலணியில் வசித்து வரும் உதயசங்கர் என்பவருடைய மனைவி நிஷாந்தி. இவர் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி ரத்த புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட்டார். தன் அம்மா உயிரிழந்ததை தாங்க முடியாமல் 16 வயது மகன் திரூஸ் மன உளைச்சலில் தவித்து வந்துள்ளார். பரந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த அவர் சிலம்பம் மற்றும் கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளில் திறமையானவர். இதில் பல பதக்கங்களையும் வென்றுள்ளார்.
ஆனால் தன்னுடைய தாயின் மறைவுக்கு பிறகு அம்மா இல்லாமல் வாழவே பிடிக்கவில்லை என்று அடிக்கடி தன் தந்தையிடம் கூறிவந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம் போல தங்கையுடன் டியூஷன் செல்ல மறுத்த சிறுவன் தங்கையை மட்டும் அனுப்பி விட்டான். சந்தை வீட்டில் இல்லாத நிலையில் தனியாக இருந்த சிறுவன் தன் தாயின் புடவையை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டான்.
இரவு 9 மணிக்கு டியூஷன் முடிந்து வீடு திரும்பிய தங்கை அண்ணன் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது அண்ணன் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியும் மகனையும் ஒரே மாதத்தில் இருந்த உதயசங்கர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளார். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரானிய கடற்படையை…
உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மதுக்கடையால் தங்கள் குடும்பங்கள் சீரழிவதைக் கண்டு கொதித்தெழுந்த பெண்கள்,…
அமெரிக்காவின் முன்னணி நிதி நிறுவனமான ஜேபி மோர்கன் (JPMorgan) வங்கியின் லிவரேஜ்டு ஃபைனான்ஸ் பிரிவின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய லோர்னா…
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில், திருமண மேடையிலேயே மணப்பெண் செய்த அதிரடி காரியம் ஒட்டுமொத்த ஊரையும் அதிர வைத்துள்ளது.…
மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றமான சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை "ட்ரம்ப் ஜலசந்தி"…
மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதை ஆற்றின் பர்கி அணைப் பகுதியில் நிகழ்ந்த கோரப் படகு விபத்து, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.…