மேடையிலிருந்து குதித்த மணப்பெண்.. மாலை மாற்றும் நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. கௌரவம் பார்க்கப்போய் நடுத்தெருவுக்கு வந்த தந்தை..!!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில், திருமண மேடையிலேயே மணப்பெண் செய்த அதிரடி காரியம் ஒட்டுமொத்த ஊரையும் அதிர வைத்துள்ளது. திருமணத்திற்காகத் தந்தை பல லட்சங்களைச் செலவு செய்து, விருந்து மற்றும் ஊர்வலம் என அனைத்து ஏற்பாடுகளையும் தடபுடலாகச் செய்திருந்தார். ஆனால், மாலை மாற்றும் அந்த முக்கியமான தருணத்தில், மணப்பெண் திடீரென மேடையிலிருந்து கீழே குதித்து ஓடி, அங்கே நின்றிருந்த தனது காதலனின் கழுத்தில் மாலையைப் போட்டார். ஒரு நொடியில் நடந்த இந்தச் சம்பவத்தைப் பார்த்த அங்கிருந்தவர்கள் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

இந்தச் செயலால் மணப்பெண்ணின் தந்தை மற்றும் மணமகன் வீட்டார் என இரு தரப்பினரின் கௌரவமும் மண்ணோடு மண்ணானது. கௌரவம் போய்விடுமோ என்ற பயத்தில், காதலித்தவனோடு சேர்த்து வைக்காமல் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கத் தந்தை முயன்றார். ஆனால், அந்த முயற்சியால் கௌரவம் காக்கப்படுவதற்குப் பதிலாக, ஊரே பார்க்கும் படி ஒட்டுமொத்த மானமும் கப்பலேறிப்போனது. பல லட்சம் ரூபாய் பணமும், பல மாத உழைப்பும் ஒரு நிமிடத்தில் வீணாகிப் போனதுதான் மிச்சம்.

பெற்றோர்கள் சமூகத்திற்குப் பயந்து கொண்டு தங்கள் பிள்ளைகளின் விருப்பத்தை மிதிக்க நினைப்பதாலேயே இத்தகைய விபரீதங்கள் நிகழ்கின்றன. மாற்றுச் சமூகத்தில் திருமணம் செய்து வைத்தால் ஊர் என்ன சொல்லுமோ என்ற பயம், இறுதியில் அதே ஊர் நகைக்கும் அளவிற்கு ஒரு அவமானத்தையே தேடித்தருகிறது. சமூகத்தைப் பற்றிச் சிந்திப்பதை விட, பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்கள் விரும்பியவர்களோடு சேர்த்து வைத்திருந்தால் இவ்வளவு பெரிய இழப்பும், அவமானமும் ஏற்பட்டிருக்காது என்பதே நிதர்சனம். பிள்ளைகளின் எதிர்காலத்தை விடச் சமூகம் பெரிதல்ல என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

Soundarya

Recent Posts

அடுத்த பிரதமர் விஜய்யா?…. கடுப்பான ராகுல் காந்தி… போன் போட்டு சமரசம் செய்த மாணிக்கம் தாகூர்…. அறிவாலயத்தையும் டெல்லியையும் அதிர வைத்த அந்த ஒரு அறிக்கை…..!

தேசிய அரசியலில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னணி கருத்துக்கணிப்பு…

3 minutes ago

“ரயிலில் துர்நாற்றம் வீசிய அந்த சிவப்பு சூட்கேஸ்”…. கூடுவாஞ்சேரி கொலை வழக்கில் அடுத்தடுத்து அம்பலமாகும் பகீர் உண்மைகள்…. போலீசுக்கு பறந்த பரபரப்பு கடிதம்….!

சென்னை கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள கொடூரக் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்ற…

8 minutes ago

“விஜய் பிரதமர் ஆவதாவது.. காமெடியா பண்ணாதீங்க”…. டி.கே.எஸ். இளங்கோவனின் நக்கலான பதில்…. சூடாகும் தமிழக அரசியல்….!

தமிழகத்தில் பல தசாப்தகால திராவிடக் கட்சி ஆதிக்கத்தை உடைத்து, எந்தக் கூட்டணியும் இன்றித் தனித்துப் போட்டியிட்டு 35 சதவீத வாக்குகளுடன்…

16 minutes ago

அட இது நல்லா இருக்கே?… வீட்டு வேலை செய்ய மனைவிக்கு மாதச் சம்பளம்…. அரசு அதிகாரியின் நெகிழ வைக்கும் செயல்…!

வீட்டு வேலைகளை வெறும் கடமையாகப் பார்க்காமல், இல்லத்தரசிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் கணவர் தனது மனைவிக்கு மாதந்தோறும் "சம்பளம்" போன்ற…

24 minutes ago

“9 நாட்களாக இருண்ட சுரங்கம்… 216 மணி நேர நரகம்”…. உணவில்லாமல் உயிர்பிழைத்த அதிசயம்….. நேபாளத்தில் நடந்த நடுநடுங்க வைக்கும் சம்பவம்….!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், சுமார் 4,000 பேர் காணாமல்…

33 minutes ago

“ஹார்முஸ் இனி ‘ட்ரம்ப் ஜலசந்தி’?”…. போட்ட ஒரே போஸ்ட்டால் வெடித்த உலகப்போர் பதற்றம்…. ஈரானை அதிரவைத்த அந்த ஒரு அறிவிப்பு…!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முற்றியுள்ள போர்ப் பதற்றத்தால், உலகளவிலான எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து…

50 minutes ago