“ரயிலில் துர்நாற்றம் வீசிய அந்த சிவப்பு சூட்கேஸ்”…. கூடுவாஞ்சேரி கொலை வழக்கில் அடுத்தடுத்து அம்பலமாகும் பகீர் உண்மைகள்…. போலீசுக்கு பறந்த பரபரப்பு கடிதம்….!

Spread the love

சென்னை கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள கொடூரக் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்ற பெண், கள்ளக்காதல் விவகாரத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்டு, அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக மணிப்பூர் நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பதுங்கியிருந்த மாணிக் லஸ்கர் என்பவரையும், அவரது மனைவி பகபதி மாஜியையும் அதிரடியாகக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலைக்கான பின்னணி குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணிக் லஸ்கருடன் தகாத உறவில் இருந்த ஹயாதுன் நிஷா கர்ப்பமானதால், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், ஏற்கனவே திருமணமான மாணிக் அதற்கு மறுக்கவே, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவன்-மனைவி இருவரும், யூடியூப் பார்த்து பெண்ணைக் கொலை செய்து உடலைக் கூறு போடுவது எவ்வாறு எனத் திட்டமிட்டு, இக்கொடூரத்தைச் அரங்கேற்றியுள்ளனர்.

கொலை செய்த பிறகு உடலிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க வினிகர் ஊற்றி, பிரியாணி அண்டாவில் காய்கறிகள் மற்றும் அரிசியுடன் சேர்த்துச் சமைக்க முயன்றதாகக் குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், சில உடல் பாகங்களைச் சிவப்பு நிற சூட்கேஸில் வைத்து ஆக்ரா செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றிவிட்டுத் தப்பியுள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதியை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் கூடுவாஞ்சேரி வீட்டிற்கு நேரில் அழைத்துச் சென்று, குற்றத்தைச் எவ்வாறு செய்தனர் எனப் போலீஸார் நடித்துக் காட்டச் செய்து ஆதாரங்களைச் சேகரித்தனர்.

விசாரணையின் போது, ஹயாதுன் நிஷாவின் தலையைச் சூட்கேஸில் வைத்து ஆக்ரா ரயிலில் அனுப்பியதாகத் தம்பதியினர் ஒப்புக் கொண்டனர். கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆக்ரா சென்றடைந்தது அந்தச் சூட்கேஸ் என்பதால், அதைக் கைப்பற்றிய ஆக்ரா போலீஸாரிடம் இருந்து நிஷாவின் தலை மற்றும் பிற உடல் பாகங்களை ஒப்படைக்குமாறு தமிழகப் போலீஸார் தற்போது முறைப்படி கடிதம் எழுதியுள்ளனர். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கத் தேவையான மேல்நடவடிக்கைகளை காவல் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“பிலிங்கிட் ஆர்டர் செய்த முட்டையில் நெளிந்த புழுக்கள்…” மங்களூரு வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் ஆன்லைன் டெலிவரி செயலியான 'பிலிங்கிட்' மூலம் வாடிக்கையாளர் ஒருவர் முட்டை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி…

7 minutes ago

ஒரே ஒரு ஐஏஎஸ் அதிகாரி…. அலறி அடித்த வியாபாரிகள்…! மும்பை ஸ்ட்ரீட் புட் உணவகங்களில் நடந்த அதிசயம்…!

மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கையால், மும்பை வீதியோர உணவகங்களில் பெரும் மாற்றம்…

10 minutes ago

அடச்சீ… காதலனுடன் சுற்ற சொந்த மாமா வீட்டிலேயே… 5 லட்சம் நகை கொள்ளை… உல்லாச விடுதியில் ஜாலியாக… இருந்த காதலி அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!

தன் காதலனுடன் ரெஸ்டாரண்ட், ஹோட்டல் மற்றும் மால் போன்ற இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்க்கக் கையில் பணமில்லாமல் தவித்த இளம்பெண் ஒருவர்,…

12 minutes ago

அடப்பாவி… காதலிக்கு பிறந்தநாள் கிஃப்ட் ஐபோனா?… இல்ல ஜெயிலா?… 12 கிலோ கஞ்சாவுடன் பைக்கில் பறந்த… இளம் ஜோடிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

இளம் ஜோடியினர் ஒடிசாவிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெத்தபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த…

23 minutes ago

“ஒரு பைசா கூட விடல…” சேற்றில் புதைந்த லட்சக்கணக்கான ரூபாய் பணம்…! உரியவரிடம் ஒப்படைத்த மீட்பு குழு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

நேபாள நாட்டில் வரலாறு காணாத பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு ஒட்டுமொத்த தேசமே பெரும் துயரத்திலும் பேரழிவிலும் மூழ்கியுள்ளது. ஆயிரக்கணக்கான…

27 minutes ago