“ரயிலில் துர்நாற்றம் வீசிய அந்த சிவப்பு சூட்கேஸ்”…. கூடுவாஞ்சேரி கொலை வழக்கில் அடுத்தடுத்து அம்பலமாகும் பகீர் உண்மைகள்…. போலீசுக்கு பறந்த பரபரப்பு கடிதம்….!

By Nanthini on புரட்டாதி 4, 2026

Spread the love

சென்னை கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள கொடூரக் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்ற பெண், கள்ளக்காதல் விவகாரத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்டு, அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக மணிப்பூர் நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பதுங்கியிருந்த மாணிக் லஸ்கர் என்பவரையும், அவரது மனைவி பகபதி மாஜியையும் அதிரடியாகக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

கொலைக்கான பின்னணி குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணிக் லஸ்கருடன் தகாத உறவில் இருந்த ஹயாதுன் நிஷா கர்ப்பமானதால், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், ஏற்கனவே திருமணமான மாணிக் அதற்கு மறுக்கவே, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவன்-மனைவி இருவரும், யூடியூப் பார்த்து பெண்ணைக் கொலை செய்து உடலைக் கூறு போடுவது எவ்வாறு எனத் திட்டமிட்டு, இக்கொடூரத்தைச் அரங்கேற்றியுள்ளனர்.

கொலை செய்த பிறகு உடலிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க வினிகர் ஊற்றி, பிரியாணி அண்டாவில் காய்கறிகள் மற்றும் அரிசியுடன் சேர்த்துச் சமைக்க முயன்றதாகக் குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், சில உடல் பாகங்களைச் சிவப்பு நிற சூட்கேஸில் வைத்து ஆக்ரா செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றிவிட்டுத் தப்பியுள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதியை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் கூடுவாஞ்சேரி வீட்டிற்கு நேரில் அழைத்துச் சென்று, குற்றத்தைச் எவ்வாறு செய்தனர் எனப் போலீஸார் நடித்துக் காட்டச் செய்து ஆதாரங்களைச் சேகரித்தனர்.

   

விசாரணையின் போது, ஹயாதுன் நிஷாவின் தலையைச் சூட்கேஸில் வைத்து ஆக்ரா ரயிலில் அனுப்பியதாகத் தம்பதியினர் ஒப்புக் கொண்டனர். கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆக்ரா சென்றடைந்தது அந்தச் சூட்கேஸ் என்பதால், அதைக் கைப்பற்றிய ஆக்ரா போலீஸாரிடம் இருந்து நிஷாவின் தலை மற்றும் பிற உடல் பாகங்களை ஒப்படைக்குமாறு தமிழகப் போலீஸார் தற்போது முறைப்படி கடிதம் எழுதியுள்ளனர். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கத் தேவையான மேல்நடவடிக்கைகளை காவல் துறை தீவிரப்படுத்தியுள்ளது.