பிரபல பாலிவுட் நடிகரான அமீர்கான் சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாக செய்தி வெளியானது. அந்தச் செய்தியை அமீர் கானும் உறுதிப்படுத்து இருந்தார். இன்று அமீர்கான் தனது அறுபதாவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடினார். அது மட்டும் அல்லாமல் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய பாலிவுட் நண்பர்கள் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் ஆகியோரை அமீர்கான் தன்னுடைய வீட்டிற்கு அழைத்திருந்தார். பிரம்மாண்டமாக வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது. இதனிடையே அவர்கள் இரண்டு பேரையும் அமீர் கான் தன்னுடைய வீட்டிற்கு அழைத்ததற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
அதாவது தன்னுடைய புதிய காதலி கௌரியை பாலிவுட் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதற்காக ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் அமீர் கான் தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இதனை அமீர்கான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர், நானும் கௌரவம் 25 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக சந்தித்துக் கொண்டோம். தற்போது நாங்கள் வாழ்க்கை துணையாகிறோம். எங்களுடைய உறவில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கௌரியை என்னுடைய நண்பர்கள் ஷாருக்கான் மற்றும் சல்மான்கானுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.
கௌரி தற்போது தயாரிப்பு பிரிவில் இருக்கின்றார். எனது 60 வயதில் திருமணம் மகிழ்ச்சியை கொடுக்குமா என எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னுடைய குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எனது முன்னாள் மனைவிகளுடன் சிறந்த உறவுகளைப் பெற்று இருப்பது எனக்கு மிகவும் அதிர்ஷ்டம். கௌரி ஒரு சில படங்களை மட்டுமே இதுவரை பார்த்து உள்ளார். எங்களுடைய உறவால் எங்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியாக உள்ளனர். கௌரி ஆறு வயது மகனுக்கு தாய் ஆவார். அது மட்டுமல்லாமல் அவர் பாதி தமிழ், பாதி ஐரிஸ் இனத்தை சேர்ந்தவர். கௌரியின் தாத்தா சுதந்திரப் போராட்ட வீரர் என அமீர் கான் தெரிவித்துள்ளார். அமீர்கான் முதன்முதலில் ரீனா தத்தா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 16 ஆண்டுகள் கழித்து 2002 ஆண்டு விவாகரத்து பெற்றார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் விவாகரத்திற்கு பிறகும் தனது மனைவியுடன் நல்ல நட்பில் இருக்கிறார். அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை அமீர்கான் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இந்த தம்பதிகளுக்கு ஆஷாத் என்ற மகன் உள்ளார். இரண்டு காதல் திருமணமும் திருப்தி அளிக்காத நிலையில் தற்போது மூன்றாவது காதலியை அமீர் கான் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…