தெலுங்கானாவில் மகன் ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த தந்தை கர்ப்பிணி மருமகளை கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் பீம் ஆசிபா பாத் மாவட்டத்தில் தாஹேகம் மண்டலத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் BC சமூகத்தை சேர்ந்தவர். இவர் அதே பகுதியை சேர்ந்த ராணி என்ற பட்டியலின பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால் சேகரின் தந்தை இவர்களுடைய திருமணத்தை சிறிதும் விரும்பவில்லை. மகன் மற்றும் மருமகள் மீது அவர் வஞ்சத்துடன் இருந்துள்ளார்.
இதனிடையே ராணி தற்போது ஒன்பது மாதம் கர்ப்பிணியாக இருந்த நிலையில் சேகர் என் தந்தையின் ஜாதி வெறி ரத்த வெறியாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று கர்ப்பிணி மருமகளை அவர் இரக்கம் இல்லாமல் கோடாரியால் தாக்கினார். தாக்குதலில் பலத்த காயமடைந்த ராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ராணியின் மாமனாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் மாதச் சம்பளம் மற்றும் படிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அவருக்கு மாதம்…
விலையுயர்ந்த கார்களில் மட்டுமே காணப்படும் 'சன்ரூஃப்' வசதியை, தனது எளிய ஆட்டோ ரிக்ஷாவிலேயே உருவாக்கித் தன் பிள்ளைகளை மகிழ்வித்த ஒரு…
அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி தொடர்பாக அக்கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. 30 எம்.எல்.ஏ-க்கள் இணைந்து சட்டமன்றக் கட்சித்…
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில், 22 வயதான பள்ளி உதவி ஆசிரியை ஒருவர் 8-ஆம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவருடன்…
தமிழகத்தின் 13-ஆவது முதலமைச்சராகப் பதவியேற்ற தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், பதவியேற்பு முடிந்த கையோடு அரசியல் நாகரீகம் கருதி…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த வரலாறு காணாத தோல்வி, அக்கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. வெறும் 47…