“போட்டோ அனுப்பு, அந்த ஒரு ஆடியோ”… கட்டாயப்படுத்திய பாஜக மாவட்ட தலைவர்… மகளிரணி தலைவி தற்கொலை முயற்சி..!

Spread the love

சிவகங்கை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் மற்றும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சிவகங்கை மாவட்ட பாஜக தலைவராக இருக்கும் பாண்டிதுரை, தன்னை சில புகைப்படங்களை அனுப்புமாறு கட்டாயப்படுத்தி மன ரீதியாக நெருக்கடி கொடுத்ததாக, அக்கட்சியின் மாவட்ட மகளிரணி தலைவி ராஜேஸ்வரி பரபரப்பு புகாரை முன்வைத்துள்ளார். இந்தப் பிரச்சனையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தற்கொலை முயற்சி மேற்கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி முன்னதாக சிவகங்கையில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்காக வைக்கப்பட்ட போஸ்டர்களில் கட்சி நிர்வாகிகள் அனைவரின் படங்களையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும், ஆர்ப்பாட்டத்திற்கான செலவுகளை ஏற்குமாறும் கூறி மாவட்டத் தலைவர் பாண்டிதுரை அவருக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தற்கொலை முயற்சிக்கு முன்பாக ராஜேஸ்வரி வெளியிட்டதாகக் கூறப்படும் ஆடியோவில், மாவட்டத் தலைவர் தன்னிடம் தவறான முறையில் புகைப்படங்களைக் கேட்டு வற்புறுத்தியதாகக் கூறி வருந்தியுள்ளார்.

இந்த விவகாரத்தை அடுத்து, ராஜேஸ்வரியின் குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில், காரைக்குடி அழகப்பாபுரம் காவல்துறையினர் மாவட்டத் தலைவர் பாண்டிதுரை மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மாவட்டத் தலைவரை கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் பாஜக தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மாநில மகளிரணி தலைவி கவிதா மற்றும் மண்டல பொறுப்பாளர் லட்சுமிதேவி ஆகியோர் நேரடியாக ராஜேஸ்வரியின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். கட்சி மேலிடத்திற்கு இது குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்ட மாவட்டத் தலைவர் மீது கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலுக்குக் கட்சி தயாராகி வரும் வேளையில், இந்தச் சம்பவம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

6 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

6 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

7 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

7 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

7 மணத்தியாலங்கள் ago