“அவனை புடிச்சி ஜெயில போடுங்க CM சார்”…. மார்க்கண்டேயன் கைதை கொண்டாடும் பாஜக… நாராயணன் திருப்பதி பரபரப்பு பேட்டி….!

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசுகையில், தமிழக முதல்வர் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்திற்குள் விஜய் வந்தால் எலும்பை உடைப்போம் என்பது போன்ற அவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரை இன்று காலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனிடம் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் மேஜிஸ்ட்ரேட் சுமதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன் மற்றும் மார்க்கண்டேயன் தரப்பு வழக்கறிஞர்கள் அலெக்சாண்டர், பாபு செல்வன் ஆகியோரின் வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, முதல்வருக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் மார்க்கண்டேயனை ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்தக் கைதைத் தொடர்ந்து, திமுக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சுக்கு பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதியாக இருப்பவர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி முதலமைச்சரை விமர்சிப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், இதற்காக மார்க்கண்டேயனைக் கைது செய்த காவல்துறை நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பேசும் ஒரு கட்சியின் தலைமை, தன் உறுப்பினர்களை மரியாதையுடன் நடந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்றும் அவர் விமர்சித்தார்.

அத்துடன் நிறுத்திவிடாமல், கடந்த திமுக ஆட்சியின் போது அன்றைய நிர்வாகிகள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை தரக்குறைவாகப் பேசிய போது அளிக்கப்பட்ட புகார்கள் மீது அன்றைய காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நாராயணன் திருப்பதி, தற்போதுள்ள முதல்வர் ஜோசப் விஜய் அந்த பழைய புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Nanthini

Recent Posts

காவிரி விவகாரத்தில் விழுந்தது பேரிடி! தமிழகத்திற்கு இனி தண்ணீர் கிடையாது… ஸ்தம்பித்த டெல்டா… விஜய்க்கு சிக்கலே இனிதான்….!

காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினையில் மீண்டும் ஒரு பெரும் சிக்கல் உருவாகி, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

10 minutes ago

பகீர்… சேலை கேட்கப் போய் நேர்ந்த கொடூரம்… கணவரை பிரஷர் குக்கரால் தலையிலேயே… அடித்துக் கொன்ற மனைவி…!!

மும்பையை அடுத்த பத்லாப்பூர் கிழக்கு சிர்காவ் பகுதியைச் சேர்ந்த 35 வயதான மாற்றுத்திறனாளி ஹரி ராம் சிங் கொடூரமான முறையில்…

11 minutes ago

முரசொலி மாறன் சொன்ன “பிசாசு” அரசியல்… பாஜக கூட்டணிக்கு ரூட் போட்ட திமுக? …. அந்த ரகசிய திட்டம் உண்மைதான்” – தமிழகத்தில் அடுத்த அரசியல் பூகம்பம்….!

மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் இருந்தாலும், மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் திமுகவால் இயங்க முடியாது என்பதே வரலாறு என்று மூத்த…

15 minutes ago

“சீமான்னா யாரு? MP-யா? MLA-வா?”… பதில் சொல்லாமல் ஓட்டம் பிடித்த அமைச்சர் விஜய் பாலாஜி… கொதித்தெழுந்த நாம் தமிழர் தம்பிகள்….!

சேலம் மாவட்டம் ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக…

20 minutes ago

“டேய்… என்னடா இது சோதனை…?! வாலிபர் போன இடமெல்லாம்… பின்னாடியே போனா எப்படி…? நெட்டிசன்களை அதிரவைத்த காட்சி…!!

இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில் இளைஞரை இரண்டு பாம்புகள் பின்தொடர்ந்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், இது AI தொழில்நுட்பத்தைப்…

24 minutes ago

திமுகவின் ‘அரசியல் முத்திரை’ அவுட்…. பேருந்து முதல் காலை உணவு வரை… விஜய் அடித்த ‘மாஸ்’ ஸ்கெட்ச்… பின்னணியில் இருக்கும் அந்த ஒரு காரணம்…!

தமிழக அரசியல் களம் எப்போதும் கொள்கை மோதல்களுக்கும், அதிரடி அரசியல் மாற்றங்களுக்கும் பெயர் பெற்றது. ஆட்சிப் பொறுப்பு மாறும்போதெல்லாம் முந்தைய…

24 minutes ago