தமிழக அரசியல் களம் எப்போதும் கொள்கை மோதல்களுக்கும், அதிரடி அரசியல் மாற்றங்களுக்கும் பெயர் பெற்றது. ஆட்சிப் பொறுப்பு மாறும்போதெல்லாம் முந்தைய அரசின் அடையாளங்களை மாற்றுவதும், புதிய திட்டப் பெயர்களைச் சூட்டுவதும் இங்கு வழக்கமான ஒரு நிகழ்வே. இருப்பினும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு, முந்தைய திமுக ஆட்சியின் முதன்மை நலத்திட்டங்களின் பெயர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருவது மாநில அரசியலில் பெரும் புயலையும் புதிய விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
குறிப்பாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசியல் முத்திரையாக விளங்கிய ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தற்போது ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, உயர்வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேபோல, தேர்தல் பிரசாரச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்ட ‘விடியல்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு ‘மகளிர் பயணம்’ என்றும், ‘நான் முதல்வன்’ திட்டம் ‘திறன் தமிழ்நாடு’ என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்திற்கும் கட்சிச் சார்பற்ற பொதுப் பெயரைச் சூட்ட பரிசீலனைகள் நடந்து வருகின்றன.
இந்தத் தொடர் பெயர் மாற்றங்களுக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. திட்டங்களின் பெயர்களை மாற்றுவதால் மட்டுமே அதைக் கொண்டுவந்த தலைவர்களின் லெகசியையோ அல்லது பயனாளிகளின் மனதில் உள்ள நன்றியையோ அழித்துவிட முடியாது என்று அவர்கள் விமர்சிக்கின்றனர். அரசியல் ரீதியாக ஸ்டாலினின் அடையாளத்தை மறைத்து, அரசின் நலத்திட்டங்களை தவெக அரசின் கணக்கில் ரீ-பிராண்ட் செய்வதே விஜய்யின் பிரதான வியூகம் என்பது எதிர்த்தரப்பின் குற்றச்சாட்டாக உள்ளது.
அதேவேளையில், இக்கருத்துகளை தவெக வட்டாரங்கள் முற்றிலும் மறுக்கின்றன. அரசுத் திட்டங்கள் என்பவை மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படுபவை என்பதால், அவற்றில் குறிப்பிட்ட அரசியல் தலைவர்களின் பெயர்களோ அல்லது கட்சியின் தேர்தல் முழக்கங்களோ இடம்பெறக் கூடாது என்பதே முதலமைச்சர் விஜய்யின் தெளிவான நிலைப்பாடாகும். கட்சி சார்பற்ற பொதுப் பெயர்களும், காமராஜர் போன்ற வரலாற்றுத் தலைவர்களின் பெயர்களுமே மக்கள் பணத்தில் இயங்கும் திட்டங்களுக்குப் பொருத்தமானவை என்ற தவெகவின் இந்த நிர்வாக நகர்வு, தமிழக அரசியலில் ஒரு புதிய முத்திரையைப் பதிக்கத் தொடங்கியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாடியால் கிராமத்தைச் சேர்ந்த முகமது நசாகத் என்பவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொலல்கெரே தாலுகாவிற்குட்பட்ட டி. நுலேனூர் அருகே வேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று…
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் போட்டித் தேர்வுகள் மற்றும் அரசுப் பணித் தேர்வுகளின் வினாத்தாள்கள் சுமார் 152 முறை கசிந்துள்ளதாகக்…
சென்னை வேளச்சேரியில் தங்கி, தனியார் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியின் முன்னாள்…
ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பாலங்கள் மற்றும் மின்…
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது 17 வயது மகன் குரு பிரசாத், தினமும்…