“யார்கிட்டையாவது சொன்னா கொலை பண்ணிடுவேன்”….. 12 வயது சிறுமியை மிரட்டி 4 மாதங்களாக சீரழித்த 56 வயது நபர்…. தாம்பரத்தில் அரங்கேறிய பகீர் சம்பவம்….!

Spread the love

தாம்பரம் அருகே பிரியாணி கடை உரிமையாளர் ஒருவர், தனது கடையில் பணிபுரியும் மாஸ்டரின் 12 வயது சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த ஆதி நகர் பகுதியில் பிரியாணி தயாரிக்கும் குடோன் மற்றும் கடையை நடத்தி வரும் முகமது யூசுப் (56) என்பவரே இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அங்கு மாஸ்டராக வேலை பார்க்கும் நபர், பள்ளி விடுமுறை நாட்களில் தனது மகளை வேலை செய்யும் இடத்திற்கு அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில், அந்தச் சிறுமியின் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட உரிமையாளர் கடந்த நான்கு மாதங்களாக இப்பாதகச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், இதுகுறித்துத் தந்தையிடம் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் அச்சிறுமியை மிரட்டிப் பணிய வைத்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று, சிறுமியின் தந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற சமயம் பார்த்து முகமது யூசுப் மீண்டும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகத் தந்தை திடீரென உள்ளே வர, பயந்துபோன சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரங்கள் அனைத்தையும் கண்ணீர் மல்கக் கூறி கதறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த தந்தை, இச்சம்பவம் குறித்துச் சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட தந்தையின் புகாரின் பேரில் அதிரடி நடவடிக்கை எடுத்த மகளிர் போலீசார், சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து வழக்குப் பதிவு செய்து, பிரியாணி கடை உரிமையாளர் முகமது யூசுப்பை போக்சோ சட்டத்தின்கீழ் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தைகளுக்கான பாதுகாப்புப் பகுதியில் அரங்கேறிய இந்த அநீதி, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

25 minutes ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

38 minutes ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

50 minutes ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

1 மணத்தியாலம் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

1 மணத்தியாலம் ago