பஸ் ஸ்டாண்ட் ரோடு சிக்னல்கள் கடை வீதிகள் என பெரும்பாலான இடங்களில் பலரும் பிச்சை எடுப்பதை நாம் பார்க்கிறோம். வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் நோயாளிகள் என பலரும் கையேந்தி பிச்சை கேட்கின்றனர். குறிப்பாக ரயிலில் பயணிக்கும் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும். ஏனெனில் ரயிலில் பிச்சை எடுப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பீகாரில் ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணுக்கு உதவி செய்த இளைஞர் அந்தப் பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தனது பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டார். கோலு யாதவ் என்ற அந்த இளைஞரின் இந்த மனிதாபிமான செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடினமான காலங்களிலும் உண்மையான அன்பும் மனிதநேயகமும் இன்னும் இருப்பதை நிரூபிக்கும் நிகழ்வாக பீகார் இளைஞர் ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்வு தந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…